சங்கீதம் 33:1-22

  • படைப்பாளரைப் புகழ்தல்

    • “அவருக்காகப் புதிய பாடல் பாடுங்கள்” (3)

    • யெகோவாவின் வார்த்தையாலும் சுவாசத்தாலும் எல்லாமே உருவாக்கப்பட்டது (6)

    • யெகோவாவின் தேசம் சந்தோஷமானது (12)

    • யெகோவாவின் கண்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன (18)

33  நீதிமான்களே, யெகோவாவை நினைத்து சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.+ நேர்மையானவர்கள் அவரைப் புகழ்வது பொருத்தமானது.   யாழ் இசைத்து யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்.பத்து நரம்புகள் கொண்ட யாழை இசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.   அவருக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+நரம்பிசைக் கருவிகளைத் திறமையாக வாசித்து, சந்தோஷக் குரல் எழுப்புங்கள்.   ஏனென்றால், யெகோவாவின் வார்த்தை உண்மையானது.+அவருடைய செயல்கள் எல்லாமே நம்பகமானது.   நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+ இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+   யெகோவாவின் வார்த்தையால் வானம் உண்டாக்கப்பட்டது.+அவருடைய வாயின் சுவாசத்தால் வானத்திலுள்ள எல்லாமே உருவாக்கப்பட்டது.   அவர் கடல் நீரை அணைபோல் தேக்கி வைக்கிறார்.+பொங்கியெழும் தண்ணீரைக் களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறார்.   பூமி முழுவதும் யெகோவாவுக்குப் பயப்படட்டும்.+ இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரும் அவருக்குப் பயபக்தி காட்டட்டும்.   ஏனென்றால், அவர் சொன்னவுடன் பூமி உருவானது.+அவர் கட்டளை கொடுத்தவுடன் அது உறுதியாக நின்றது.+ 10  தேசங்கள் செய்த சூழ்ச்சிகளை* யெகோவா முறியடித்தார்.+ஜனங்கள் போட்ட திட்டங்களை* அவர் குலைத்துப்போட்டார்.+ 11  ஆனால், யெகோவாவின் தீர்மானங்களும்,*அவருடைய உள்ளத்தின் யோசனைகளும் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.+ 12  யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+ 13  யெகோவா பரலோகத்திலிருந்து கீழே பார்க்கிறார்.எல்லா மக்களையும் பார்க்கிறார்.+ 14  அவர் குடிகொண்டிருக்கிற இடத்திலிருந்துபூமியிலுள்ள ஜனங்களைக் கவனிக்கிறார். 15  எல்லாருடைய இதயங்களையும் உருவாக்குகிறவர் அவர்தான்.அவர்களுடைய செயல்களையெல்லாம் ஆராய்கிறவர் அவர்தான்.+ 16  எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+ 17  குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது. 18  யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும்,+அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. 19  மரணத்திலிருந்து காப்பாற்றவும்,பஞ்சத்திலிருந்து பாதுகாக்கவும் அவர்களைக் கவனிக்கின்றன.+ 20  நாம் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறோம். அவர்தான் நமக்குத் துணை, அவர்தான் நம் கேடயம்.+ 21  அவரை நினைத்து நம் இதயம் சந்தோஷப்படுகிறது.ஏனென்றால், அவருடைய பரிசுத்தமான பெயரை நாம் நம்பியிருக்கிறோம்.+ 22  யெகோவாவே, நாங்கள் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்.+உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் எங்கள்மேல் பொழியுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆலோசனைகளை.”
வே.வா., “ஜனங்களுடைய எண்ணங்களை.”
வே.வா., “ஆலோசனைகளும்.”
வே.வா., “காப்பாற்றப்படுவோம்.”