சங்கீதம் 40:1-17

  • நிகரற்ற கடவுளுக்கு நன்றி சொல்லுதல்

    • கடவுளுடைய செயல்கள் கணக்கில் அடங்காதவை (5)

    • பலிகளை மட்டுமே கடவுள் முக்கியமானதாக நினைப்பதில்லை (6)

    • “உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்” (8)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 40  நான் யெகோவாவுக்காக நம்பிக்கையோடு* காத்திருந்தேன்.உதவி கேட்டு நான் கதறியதை அவர் காதுகொடுத்து* கேட்டார்.+   இரைச்சல் கேட்கிற ஆழமான குழியிலிருந்தும்,சேற்றிலிருந்தும் என்னைத் தூக்கிவிட்டார். மாபெரும் கற்பாறைமேல் என்னை நிறுத்தினார்.என்னைக் காலூன்றி நிற்க வைத்தார்.   என்னைப் புதிய பாடல் பாட வைத்தார்.+நம் கடவுளைப் புகழ்ந்து பாட வைத்தார். நிறைய பேர் பிரமிப்போடு பார்த்து,யெகோவாமேல் நம்பிக்கை வைப்பார்கள்.   அடங்காதவர்களோடும் போலித்தனமான ஆட்களோடும்* சேராமல்யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவன் சந்தோஷமானவன்.   என் கடவுளாகிய யெகோவாவே,எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை!எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை!+ அவை கணக்கில் அடங்காதவை!+அவற்றையெல்லாம் நான் விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.கடவுளே, உங்களைப் போன்றவர் வேறு யாருமே இல்லை!+   பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை.+தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் கேட்கவில்லை.+ ஆனால், உங்கள் வார்த்தையைக் கேட்க என்னுடைய காதுகளைத் திறந்தீர்கள்.+   அப்போது நான், “இதோ, வந்துவிட்டேன். சுருளில் என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.+   என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+   உங்களுடைய நீதியைப் பற்றிய நல்ல செய்தியை மாபெரும் சபையில் சொல்கிறேன்.+ பாருங்கள், என் உதடுகளை நான் மூடுவதே இல்லை.+யெகோவாவே, இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். 10  நான் உங்களுடைய நீதியை என் இதயத்தில் மறைத்து வைப்பதில்லை. உங்களுடைய நம்பகத்தன்மையையும் மீட்பையும் பற்றிப் பேசுகிறேன். உங்களுடைய மாறாத அன்பையும் உண்மையையும் பற்றி மாபெரும் சபையில் மறைக்காமல் சொல்கிறேன்”+ என்றேன். 11  யெகோவாவே, எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்துவிடாதீர்கள். உங்களுடைய மாறாத அன்பும் உண்மையும் எப்போதுமே என்னைப் பாதுகாக்கட்டும்.+ 12  எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+ வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது. 13  யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.+ யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+ 14  என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிற எல்லாரும்அவமானத்தில் தலைகுனியட்டும். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும். 15  என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள் தங்களுக்கு வரும் அவமானத்தால் அதிர்ச்சி அடையட்டும். 16  ஆனால், உங்களைத் தேடுகிறவர்கள்,+உங்களை நினைத்து சந்தோஷத்தில் பூரித்துப்போகட்டும்.+ நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள், “யெகோவாவுக்கு மகிமை சேரட்டும்!”+ என்று எப்போதும் சொல்லட்டும். 17  நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.யெகோவாவே, என்னைக் கவனியுங்கள். நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+என் கடவுளே, தாமதிக்காதீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பொறுமையோடு.”
வே.வா., “குனிந்து.”
வே.வா., “பொய் பேசுகிறவர்களோடும்; பொய் வழியில் போகிறவர்களோடும்.”
வே.வா., “என் விருப்பம்.”
வே.வா., “சித்தத்தை.”