சங்கீதம் 47:1-9

  • பூமி முழுவதுக்கும் கடவுள்தான் ராஜா

    • “யெகோவா பயபக்திக்குரியவர்” (2)

    • கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள் (6, 7)

இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம். 47  மக்களே, எல்லாரும் கை தட்டுங்கள். சந்தோஷ ஆரவாரத்தோடு கடவுளுக்கு வெற்றி முழக்கம் செய்யுங்கள்.   உன்னதமான கடவுளாகிய யெகோவா பயபக்திக்குரியவர்.*+பூமி முழுவதுக்கும் அவர்தான் மகா ராஜா.+   மக்களை நம்மிடம் அடிபணிய வைக்கிறார்.தேசங்களை நம் காலடியில் விழ வைக்கிறார்.+   அவர் நமக்காக நம் சொத்தைத் தேர்ந்தெடுக்கிறார்.+அவர் நேசிக்கிற யாக்கோபுக்குப்+ பெருமை சேர்க்கும் சொத்து அது. (சேலா)   சந்தோஷ ஆரவாரத்தோடும், ஊதுகொம்பின்* சத்தத்தோடும்யெகோவா மேலே போனார்.   கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்,* அவரைப் புகழ்ந்து பாடுங்கள். நம் ராஜாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.   ஏனென்றால், பூமி முழுவதுக்கும் கடவுள்தான் ராஜா.+அவரைப் புகழ்ந்து பாடுங்கள், விவேகத்தோடு* நடந்துகொள்ளுங்கள்.   கடவுள் எல்லா தேசங்களுக்கும் ராஜாவானார்.+ கடவுள் தன்னுடைய பரிசுத்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.   மக்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய ஜனங்களோடு கூடிவந்திருக்கிறார்கள்.ஏனென்றால், இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்.* கடவுள் மிக மிக உயர்ந்தவர்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பிரமிக்க வைக்கிறவர்.”
வே.வா., “எக்காளத்தின்.”
வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
நே.மொ., “பூமியின் கேடயங்கள் கடவுளுக்குச் சொந்தம்.”