சங்கீதம் 49:1-20

  • சொத்துகளை நம்புவது முட்டாள்தனம்

    • எந்த மனிதனாலும் இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது (7, 8)

    • கல்லறையிலிருந்து கடவுள் விடுவிக்கிறார் (15)

    • சொத்துப்பத்துகள் எதுவும் சாவிலிருந்து காப்பாற்றாது (16, 17)

இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம். 49  மக்களே, எல்லாரும் இதைக் கேளுங்கள். உலக ஜனங்களே, எல்லாரும் கவனியுங்கள்.   சிறியவர்களே, பெரியவர்களே,ஏழைகளே, பணக்காரர்களே, எல்லாரும் கேளுங்கள்.   என் வாய் ஞானமான வார்த்தைகளைப் பேசும்.என் இதயம் ஆழமான* விஷயங்களைத் தியானிக்கும்.+   பழமொழியை நான் காதுகொடுத்துக் கேட்பேன்.யாழ் இசைத்துக்கொண்டே என் விடுகதையை விளக்குவேன்.   கொடிய காலங்களில் நான் எதற்காகப் பயப்பட வேண்டும்?+என்னைக் கவிழ்க்க நினைக்கிறவர்களின் அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதுநான் ஏன் நடுங்க வேண்டும்?   சொத்துகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களோ,+சொத்துகளைக் குவித்து வைத்திருப்பதாகப் பெருமை பேசுகிறவர்களோ,+   யாராக இருந்தாலும், இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது.அவனுக்காகக் கடவுளுக்கு மீட்புவிலையைக் கொடுக்கவும் முடியாது.+   (அவர்களுடைய உயிருக்கான மீட்புவிலை ரொம்பவே பெரிது.*அதை அவர்களால் கொடுக்கவே முடியாது.)   சவக்குழிக்குள் போகாமல் என்றென்றும் வாழும்படி ஒருவனை யாராலும் மீட்க முடியாது.+ 10  ஞானமுள்ளவர்கள்கூட செத்துப்போவதை அவர்கள் பார்க்கிறார்கள்.முட்டாள்களும் புத்தி இல்லாதவர்களும் அழிந்துபோகிறார்கள்.+அவர்கள் தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்குத்தான் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது.+ 11  ஆனாலும், தங்களுடைய வீடுகள் காலாகாலத்துக்கு இருக்க வேண்டுமென்றும்,தங்களுடைய கூடாரங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டுமென்றுமே ஆசைப்படுகிறார்கள். அதனால், தங்களுடைய நிலபுலன்களுக்குத் தங்களுடைய பெயரை வைத்துக்கொள்கிறார்கள். 12  ஆனால், மனிதனுக்கு எவ்வளவுதான் மதிப்பு மரியாதை இருந்தாலும்,அவனால் நிலைத்திருக்க முடியாது.+அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் அவனும் இருக்கிறான்.+ 13  முட்டாள்களுக்கும்,+ அவர்களுடைய வழியில் போகிறவர்களுக்கும்,அவர்களுடைய வீண் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் அதே முடிவுதான் வரும். (சேலா) 14  வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற செம்மறியாடுகள்போல் அவர்கள் கல்லறைக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள்.இனி சாவுதான் அவர்களுடைய மேய்ப்பன். நேர்மையானவர்கள் விடியற்காலையில் அவர்களை ஆளுவார்கள்.+அவர்கள் சுவடு தெரியாமல் அழிந்துபோவார்கள்;+ இனி மாளிகையில் குடியிருக்காமல் கல்லறையில்தான்+ குடியிருப்பார்கள்.+ 15  ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா) 16  ஒருவன் பணக்காரனாவதைப் பார்த்தோ,அவனுடைய வீடு ஆடம்பரமாகிக்கொண்டே போவதைப் பார்த்தோ நீ பயப்படாதே. 17  ஏனென்றால், சாகும்போது அவனால் எதையுமே கொண்டுபோக முடியாது.+அவனுடைய சொத்துப்பத்துகள் எதுவும் அவனோடு போகாது.+ 18  உயிரோடு இருக்கும்போது அவன் தன்னையே பாராட்டிக்கொள்கிறான்.+ (ஒருவனுக்கு வசதிவாய்ப்புகள் பெருகும்போது ஜனங்கள் அவனைப் புகழ்வார்கள்.)+ 19  ஆனால் கடைசியில், தன்னுடைய முன்னோர்களைப் போலவே அவன் செத்துப்போகிறான். அவர்கள் யாரும் இனி வெளிச்சத்தைப் பார்க்கவே மாட்டார்கள். 20  ஒருவன் இதைப் புரிந்துகொள்ளாவிட்டால்,அவனுக்கு எவ்வளவுதான் மதிப்பு மரியாதை இருந்தாலும்,+ அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் இருப்பான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “விவேகமான.”
வே.வா., “மதிப்புள்ளது; அருமையானது.”