சங்கீதம் 52:1-9

  • கடவுளுடைய மாறாத அன்பை நம்புதல்

    • கெட்டதைப் பற்றிப் பெருமையடிப்பவர்களுக்கு எச்சரிக்கை (1-5)

    • கடவுளை நம்பாதவர்கள் சொத்துப்பத்துகளை நம்புகிறார்கள் (7)

இசைக் குழுவின் தலைவனுக்கு; மஸ்கீல்.* அகிமெலேக்கின் வீட்டுக்கு தாவீது போயிருந்ததைப் பற்றி சவுலிடம் ஏதோமியனாகிய தோவேக் சொன்ன பிறகு+ தாவீது பாடிய பாடல். 52  பலமுள்ளவனே, நீ செய்கிற அக்கிரமங்களைப் பற்றி ஏன் பெருமையடிக்கிறாய்?+ கடவுள் காட்டும் மாறாத அன்பு நாளெல்லாம் நீடிக்கும்+ என்பது உனக்குத் தெரியாதா?   உன் நாவு கத்திபோல் கூர்மையாக இருக்கிறது.+அது சதித்திட்டம் தீட்டுகிறது, பித்தலாட்டம் செய்கிறது.+   நல்லதைவிட கெட்டதைத்தான் நீ அதிகமாக விரும்புகிறாய்.உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதைத்தான் விரும்புகிறாய். (சேலா)   பொய் நாவு உள்ளவனே,தீமையான வார்த்தைகளையே நீ பேச விரும்புகிறாய்.   அதனால், கடவுள் உன்னை ஒரேயடியாக வீழ்த்துவார்.+உன்னைப் பிடித்து, உன் கூடாரத்திலிருந்து வெளியே இழுத்துப் போடுவார்.+இந்த உலகத்திலிருந்தே உன்னை ஒழித்துக்கட்டுவார்.+ (சேலா)   நீதிமான்கள் அதைப் பார்த்து மலைத்துப்போவார்கள்.+கெட்டவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்து,+   “இதோ! கடவுளைக் கோட்டையாக நம்பாமல்,+தன்னுடைய சொத்துப்பத்துகளையும்+ சதித்திட்டங்களையுமேகோட்டையாக நம்பியவனுக்கு வந்த கதியைப் பாருங்கள்!” என்பார்கள்.   ஆனால், நான் கடவுளுடைய வீட்டிலேசெழிப்பான ஒலிவ மரத்தைப் போல இருப்பேன்.கடவுளுடைய மாறாத அன்பை என்றென்றும் நான் நம்புகிறேன்.+   கடவுளே, நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள்.அதனால், உங்களை என்றென்றும் புகழ்வேன்.+உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்களுக்கு முன்பாக உங்கள் பெயரில் நான் நம்பிக்கையோடு இருப்பேன்.+ ஏனென்றால், அது நல்லது.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “அருமையானது.”