சங்கீதம் 53:1-6

  • முட்டாள்களைப் பற்றிய விவரிப்பு

    • “யெகோவா என்று யாருமே கிடையாது” (1)

    • “நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை” (3)

இசைக் குழுவின் தலைவனுக்கு; மகலாத்* பாணி. மஸ்கீல்.* தாவீதின் பாடல். 53  முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது” என்று சொல்கிறார்கள்.+ அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் படுமோசமானவை, அருவருப்பானவை.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+   ஆனால், கடவுள் பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.+யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+   அவர்கள் எல்லாரும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள்.எல்லாரும் ஒரேபோல் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை.ஒருவன்கூட இல்லை.+   தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா? உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள். அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.+   அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.இதுவரை இல்லாத அளவுக்கு* அவர்கள் திகில் அடைவார்கள்.உன்னைத் தாக்குகிறவர்களின் எலும்புகளைக் கடவுள் சிதறிப்போகப் பண்ணுவார். யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டதால், நீ அவர்களைத் தலைகுனிய வைப்பாய்.   சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு மீட்பு வரட்டும்!+ சிறைபிடிக்கப்பட்ட தன் ஜனங்களை யெகோவா மறுபடியும் கூட்டிச்சேர்க்கும்போது,யாக்கோபு சந்தோஷப்படட்டும், இஸ்ரவேல் பூரித்துப்போகட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
அல்லது, “பயமே இல்லாத இடத்தில்.”