சங்கீதம் 57:1-11

  • கருணை காட்ட வேண்டுதல்

    • கடவுளுடைய சிறகுகளின் கீழ் தஞ்சம் (1)

    • எதிரிகள் தோண்டிய குழியில் அவர்களே விழுகிறார்கள் (6)

இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* சவுலிடமிருந்து தப்பித்துப்போய் குகையில் ஒளிந்திருந்தபோது+ தாவீது பாடிய பாடல். 57  கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+   நான் உன்னதமான கடவுளைக் கூப்பிடுகிறேன்.என் கஷ்டங்களுக்கு முடிவுகட்டுகிற உண்மைக் கடவுளைக் கூப்பிடுகிறேன்.   அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்.+ என்மேல் பாய்கிறவனை அடக்கிப்போடுவார். (சேலா) அவர் எனக்கு மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவார்.+   சிங்கங்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.+என்னை விழுங்கப் பார்க்கிறவர்களின் நடுவே நான் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது.அவர்களுடைய பற்கள் ஈட்டிகளையும் அம்புகளையும் போல இருக்கின்றன.அவர்களுடைய நாவு கூர்மையான வாள்போல் இருக்கிறது.+   கடவுளே, உங்களுடைய புகழ் வானத்துக்கும் மேலாக உயரட்டும்.உங்களுடைய மகிமை பூமியெங்கும் பரவட்டும்.+   என் கால்களைச் சிக்க வைக்க அவர்கள் வலை விரித்திருக்கிறார்கள்.+நான் வேதனையில் துவண்டுபோயிருக்கிறேன்.+ என்னை விழ வைக்க அவர்கள் குழி தோண்டினார்கள்.ஆனால், அவர்களே அதில் விழுந்தார்கள்.+ (சேலா)   கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன்.+என் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன். நான் இசை இசைத்துப் பாடுவேன்.   என் உள்ளமே, விழித்தெழு! நரம்பிசைக் கருவியே, விழித்தெழு! யாழே, நீயும் விழித்தெழு! நான் விடியலைத் தட்டி எழுப்புவேன்.+   யெகோவாவே, மக்கள் நடுவில் உங்களைப் புகழ்வேன்.+தேசங்கள் மத்தியில் உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.*+ 10  ஏனென்றால், உங்களுடைய மாறாத அன்பு மகத்தானது.அது வானத்தைப் போல உயர்ந்தது.+உங்களுடைய உண்மைத்தன்மை ஆகாயத்தையே தொடுகிறது. 11  கடவுளே, உங்களுடைய புகழ் வானத்துக்கும் மேலாக உயரட்டும்.உங்களுடைய மகிமை பூமியெங்கும் பரவட்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “துன்பங்கள் தீரும்வரை.”
வே.வா., “இசை இசைப்பேன்.”