சங்கீதம் 60:1-12

  • கடவுள் எதிரிகளை அடக்கிவிடுகிறார்

    • மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் (11)

    • “கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்” (12)

இசைக் குழுவின் தலைவனுக்கு; “நினைப்பூட்டும் லில்லி மலர்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீது பாடியது. போதிப்பதற்குரியது. அராம்-நகராயிம் ஜனங்களோடும் அராம்-சோபா ஜனங்களோடும் தாவீது போர் செய்த சமயத்தில், யோவாப் திரும்பி வந்து ஏதோமியர்களில் 12,000 பேரை உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தபோது பாடப்பட்டது.+ 60  கடவுளே, நீங்கள் எங்களை ஒதுக்கித்தள்ளினீர்கள்; எங்களைச் சிதறடித்தீர்கள்.+ எங்கள்மேல் கோபமாக இருந்தீர்கள்; ஆனால், மறுபடியும் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!   நீங்கள் பூமியை அதிர வைத்தீர்கள்; அதை இரண்டாகப் பிளந்தீர்கள். அதன் விரிசல்களைச் சரிசெய்யுங்கள், அது இடிந்து விழுந்துகொண்டிருக்கிறது.   உங்களுடைய மக்களைத் துன்பப்பட வைத்தீர்கள். தள்ளாட வைக்கிற திராட்சமதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.+   உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்காக ஒரு கம்பத்தை* நாட்டுங்கள்.*அம்புகளிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அதனிடம் ஓடி வரட்டும். (சேலா)   உங்களுக்குப் பிரியமானவர்கள் விடுவிக்கப்படும்படி,உங்கள் வலது கையால் எங்களைக் காப்பாற்றி, எங்களுக்குப் பதில் கொடுங்கள்.+   பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்: “நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச் சொத்தாகக் கொடுப்பேன்.+சுக்கோத் பள்ளத்தாக்கைப் பங்காக அளந்து கொடுப்பேன்.+   கீலேயாத் என்னுடையது, மனாசேயும்+ என்னுடையது.எப்பிராயீம் என் தலைக்கவசம்.யூதா என் அதிகாரக்கோல்.+   மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+ ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+ பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+   முற்றுகை போடப்பட்ட* நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்? ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+ 10  கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+ 11  இக்கட்டில் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.ஏனென்றால், மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.+ 12  கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்.+எங்களுடைய எதிரிகளை அவர் மிதித்துப் போடுவார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொடிக் கம்பத்தை.”
அல்லது, “நாட்டினீர்கள்.”
அல்லது, “பரிசுத்தமான இடத்திலிருந்து.”
அல்லது, “மதில் சூழ்ந்த.”