சங்கீதம் 61:1-8

  • கடவுள், எதிரியிடமிருந்து பாதுகாக்கிற பலமான கோட்டை

    • “நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்” (4)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் பாடல். நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. 61  கடவுளே, உதவிக்காக நான் கூப்பிடும்போது கேளுங்கள். என் ஜெபத்தைக் கவனித்துக் கேளுங்கள்.+   என் நெஞ்சம் வேதனையில் தவிக்கும்போது,*+நான் பூமியின் ஒரு முனையில் இருந்தாலும் உங்களைக் கூப்பிடுவேன். உயரமான கற்பாறைமேல் என்னைக் கொண்டுபோய் விடுங்கள்.+   ஏனென்றால், நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்கிற பலமான கோட்டை.+   நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்.+உங்களுடைய சிறகுகளின் மறைவில் தஞ்சம் அடைவேன்.+ (சேலா)   ஏனென்றால் கடவுளே, ஜெபத்தில் நான் நேர்ந்துகொண்டவற்றை நீங்கள் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களின் சொத்தை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.+   ராஜாவுக்கு நீண்ட ஆயுளை நீங்கள் கொடுப்பீர்கள்.+அவரைத் தலைமுறை தலைமுறையாக வாழ வைப்பீர்கள்.   கடவுளுக்கு முன்னால் அவர் என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பார்.+உங்களுடைய மாறாத அன்பாலும் உண்மைத்தன்மையாலும் அவரைப் பாதுகாத்திடுங்கள்.+   அப்போது, நான் என்னுடைய நேர்த்திக்கடன்களைத் தினமும் செலுத்துவேன்.+உங்களுடைய பெயரைக் காலமெல்லாம் புகழ்ந்து பாடுவேன்.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நொந்துபோகும்போது.”
வே.வா., “இசை இசைப்பேன்.”