சங்கீதம் 86:1-17
தாவீதின் ஜெபம்.
86 யெகோவாவே, என் ஜெபத்தைக் காதுகொடுத்து* கேளுங்கள், எனக்குப் பதில் சொல்லுங்கள்.நான் வேதனையிலும் வறுமையிலும் வாடுகிறேன்.+
2 நான் உங்களுக்கு உண்மையாக* நடக்கிறேன், அதனால் என் உயிரைக் காத்திடுங்கள்.+
உங்களையே நம்பியிருக்கிற உங்கள் ஊழியனைக் காப்பாற்றுங்கள்.ஏனென்றால், நீங்கள்தான் என் கடவுள்.+
3 யெகோவாவே, நாள் முழுவதும் உங்களைக் கூப்பிடுகிறேன்.+எனக்குக் கருணை காட்டுங்கள்.+
4 யெகோவாவே, உதவிக்காக உங்களிடம்தான் கெஞ்சுகிறேன்.உங்களுடைய ஊழியனுக்குச் சந்தோஷம் கொடுங்கள்.
5 யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
6 யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கெஞ்சுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்.+
7 இக்கட்டு நாளில் உங்களைக் கூப்பிடுகிறேன்.+ஏனென்றால், நீங்கள் எனக்குப் பதில் தருவீர்கள்.+
8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+
9 யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய எல்லா தேசங்களும்,உங்கள் முன்னால் வந்து தலைவணங்கும்.+உங்கள் பெயருக்கு மகிமை சேர்க்கும்.+
10 ஏனென்றால், நீங்கள் மகத்தானவர், அற்புதங்களைச் செய்கிறவர்.+நீங்கள்தான் கடவுள், நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+
11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+
உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+
12 என் கடவுளாகிய யெகோவாவே, முழு இதயத்தோடு உங்களைப் புகழ்கிறேன்.+உங்களுடைய பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
13 ஏனென்றால், நீங்கள் எனக்குக் காட்டும் மாறாத அன்பு மகத்தானது.கல்லறையின் ஆழத்திலிருந்து என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+
14 கடவுளே, அகங்காரம்பிடித்த* ஆட்கள் எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார்கள்.+ஈவிரக்கம் இல்லாத கும்பல் என் உயிரைப் பறிக்கப் பார்க்கிறது.அந்த ஆட்கள் உங்களைத் துளியும் மதிப்பதில்லை.+
15 ஆனால் யெகோவாவே, நீங்கள் இரக்கமும் கரிசனையும்* உள்ள கடவுள்.நீங்கள் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் அளவில்லாமல் காட்டுகிறவர்.+
16 என்னிடமாகத் திரும்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.+
உங்களுடைய ஊழியனுக்குப் பலம் கொடுங்கள்.+உங்களுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் காப்பாற்றுங்கள்.
17 உங்களுடைய நல்மனதுக்கு ஒரு அத்தாட்சியை* எனக்குக் காட்டுங்கள்.என்னை வெறுக்கிறவர்கள் அதைப் பார்த்து அவமானப்படட்டும்.
ஏனென்றால் யெகோவாவே, நீங்கள்தான் எனக்கு உதவி செய்கிறவர், எனக்கு ஆறுதல் தருகிறவர்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “குனிந்து.”
^ வே.வா., “பற்றுமாறாமல்.”
^ வே.வா., “இரண்டுபடாத இதயத்தை எனக்குக் கொடுங்கள்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ வே.வா., “கனிவும்.”
^ வே.வா., “அடையாளத்தை.”