சங்கீதம் 86:1-17

  • யெகோவாவைப் போல வேறு கடவுள் இல்லை

    • யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் (5)

    • எல்லா தேசங்களும் யெகோவாவை வணங்கும் (9)

    • “உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்” (11)

    • “என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்” (11)

தாவீதின் ஜெபம். 86  யெகோவாவே, என் ஜெபத்தைக் காதுகொடுத்து* கேளுங்கள், எனக்குப் பதில் சொல்லுங்கள்.நான் வேதனையிலும் வறுமையிலும் வாடுகிறேன்.+   நான் உங்களுக்கு உண்மையாக* நடக்கிறேன், அதனால் என் உயிரைக் காத்திடுங்கள்.+ உங்களையே நம்பியிருக்கிற உங்கள் ஊழியனைக் காப்பாற்றுங்கள்.ஏனென்றால், நீங்கள்தான் என் கடவுள்.+   யெகோவாவே, நாள் முழுவதும் உங்களைக் கூப்பிடுகிறேன்.+எனக்குக் கருணை காட்டுங்கள்.+   யெகோவாவே, உதவிக்காக உங்களிடம்தான் கெஞ்சுகிறேன்.உங்களுடைய ஊழியனுக்குச் சந்தோஷம் கொடுங்கள்.   யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+   யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கெஞ்சுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்.+   இக்கட்டு நாளில் உங்களைக் கூப்பிடுகிறேன்.+ஏனென்றால், நீங்கள் எனக்குப் பதில் தருவீர்கள்.+   யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+   யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய எல்லா தேசங்களும்,உங்கள் முன்னால் வந்து தலைவணங்கும்.+உங்கள் பெயருக்கு மகிமை சேர்க்கும்.+ 10  ஏனென்றால், நீங்கள் மகத்தானவர், அற்புதங்களைச் செய்கிறவர்.+நீங்கள்தான் கடவுள், நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+ 11  யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+ உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+ 12  என் கடவுளாகிய யெகோவாவே, முழு இதயத்தோடு உங்களைப் புகழ்கிறேன்.+உங்களுடைய பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். 13  ஏனென்றால், நீங்கள் எனக்குக் காட்டும் மாறாத அன்பு மகத்தானது.கல்லறையின் ஆழத்திலிருந்து என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ 14  கடவுளே, அகங்காரம்பிடித்த* ஆட்கள் எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார்கள்.+ஈவிரக்கம் இல்லாத கும்பல் என் உயிரைப் பறிக்கப் பார்க்கிறது.அந்த ஆட்கள் உங்களைத் துளியும் மதிப்பதில்லை.+ 15  ஆனால் யெகோவாவே, நீங்கள் இரக்கமும் கரிசனையும்* உள்ள கடவுள்.நீங்கள் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் அளவில்லாமல் காட்டுகிறவர்.+ 16  என்னிடமாகத் திரும்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ உங்களுடைய ஊழியனுக்குப் பலம் கொடுங்கள்.+உங்களுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் காப்பாற்றுங்கள். 17  உங்களுடைய நல்மனதுக்கு ஒரு அத்தாட்சியை* எனக்குக் காட்டுங்கள்.என்னை வெறுக்கிறவர்கள் அதைப் பார்த்து அவமானப்படட்டும். ஏனென்றால் யெகோவாவே, நீங்கள்தான் எனக்கு உதவி செய்கிறவர், எனக்கு ஆறுதல் தருகிறவர்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குனிந்து.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “இரண்டுபடாத இதயத்தை எனக்குக் கொடுங்கள்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “கனிவும்.”
வே.வா., “அடையாளத்தை.”