சங்கீதம் 9:1-20

  • கடவுளுடைய அற்புதமான செயல்களைப் பற்றி அறிவித்தல்

    • யெகோவா பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார் (9)

    • கடவுளுடைய பெயரைத் தெரிந்தவர்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள் (10)

இசைக் குழுவின் தலைவனுக்கு; முத்லபேன்* இசையில்; தாவீதின் சங்கீதம். א [ஆலெஃப்] 9  யெகோவாவே, உங்களை முழு இதயத்தோடு புகழ்வேன்.உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி அறிவிப்பேன்.+   உங்களை நினைத்து நினைத்து சந்தோஷத்தில் பூரிப்பேன்.உன்னதமான கடவுளே, உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.*+ ב [பேத்]   என் எதிரிகள் பின்வாங்கி ஓடும்போது கீழே விழுவார்கள்,+உங்கள் முன்னால் அழிந்துபோவார்கள்.   நீங்கள் என் வழக்கை நியாயமாகத் தீர்த்து வைக்கிறீர்கள்.உங்களுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து நீதி வழங்குகிறீர்கள்.+ ג [கீமெல்]   தேசங்களைக் கண்டனம் செய்து,+ பொல்லாதவர்களை ஒழித்தீர்கள்.அவர்களுடைய பெயரைச் சுவடு தெரியாமல் என்றென்றைக்குமாக அழித்தீர்கள்.   எதிரிகள் அடியோடு அழிக்கப்பட்டார்கள்.அவர்களுடைய நகரங்களை நீங்கள் தரைமட்டமாக்கினீர்கள்.அவர்களை இனி யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.+ ה [ஹே]   ஆனால், யெகோவா என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+நியாயம் வழங்குவதற்காகவே அவருடைய சிம்மாசனத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+   உலகத்துக்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.+தேசங்களுக்கு நியாயமான தீர்ப்பு கொடுப்பார்.+ ו [வா]   அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கு யெகோவா பாதுகாப்பான* அடைக்கலமாக இருப்பார்.+இக்கட்டான காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பார்.+ 10  உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.+யெகோவாவே, உங்களைத் தேடி வருகிறவர்களை நீங்கள் கைவிடவே மாட்டீர்கள்.+ ז [ஸாயின்] 11  சீயோனில் குடியிருக்கிற யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.அவருடைய செயல்களை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.+ 12  அவர்களுடைய இரத்தத்துக்காகப் பழிவாங்குகிறவர் அவர்களை நினைத்துப் பார்ப்பார்.+கஷ்டப்படுகிறவர்களின் கூக்குரலை மறக்க மாட்டார்.+ ח [ஹேத்] 13  மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே,+எனக்குக் கருணை காட்டுங்கள்.என்னை வெறுக்கிறவர்கள் எனக்குக் கொடுக்கிற கஷ்டத்தைப் பாருங்கள். 14  அப்போது, உங்களுடைய அருமையான* செயல்களை சீயோன் மகளுடைய வாசல்களில் சொல்வேன்.+நீங்கள் தரும் மீட்பினால் சந்தோஷப்படுவேன்.+ ט [டேத்] 15  மக்கள் தாங்கள் வெட்டிய குழியிலேயே விழுந்தார்கள்.அவர்களுடைய கால் அவர்கள் விரித்த வலையிலேயே சிக்கிக்கொண்டது.+ 16  யெகோவா நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்புகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகின்றன.+ பொல்லாதவன் தன்னுடைய கைகளின் செயல்களினாலேயே ஆபத்தில் சிக்கிக்கொண்டான்.+ இகாயோன்.* (சேலா) י [யோத்] 17  பொல்லாதவன் கல்லறைக்குப் போய்ச் சேருவான்.கடவுளை மறந்துவிடுகிற ஜனங்களும் அங்கேதான் போய்ச் சேருவார்கள். 18  ஆனால், ஏழைகள் என்றைக்குமே மறக்கப்பட மாட்டார்கள்.+தாழ்மையானவர்களின்* நம்பிக்கையும் ஒருபோதும் வீண்போகாது.+ כ [காஃப்] 19  யெகோவாவே, எழுந்து வாருங்கள்! அற்ப மனுஷனை ஜெயிக்க விடாதீர்கள். எல்லா தேசத்து ஜனங்களும் உங்கள் முன்னால் தீர்ப்பு பெறட்டும்.+ 20  யெகோவாவே, அவர்களைக் கதிகலங்க வையுங்கள்.+தாங்கள் அற்ப மனுஷர்கள்தான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். (சேலா)

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைப்பேன்.”
வே.வா., “உயர்ந்த.”
வே.வா., “புகழத்தக்க.”
வே.வா., “சாந்தமானவர்களின்.”