சங்கீதம் 90:1-17

  • என்றென்றும் வாழ்கிற கடவுளும், கொஞ்சக் காலம் வாழ்கிற மனிதனும்

    • ஆயிரம் வருஷங்கள் நேற்றைய தினம்போல் இருக்கின்றன (4)

    • மனிதன் 70-80 வருஷங்கள் வாழ்கிறான் (10)

    • “எங்கள் வாழ்நாட்களை நன்றாகப் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொடுங்கள்” (12)

உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின்+ ஜெபம். 90  யெகோவாவே, தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள்தான் எங்கள் குடியிருப்பாக* இருக்கிறீர்கள்.+   மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+   அற்ப மனுஷனை நீங்கள் மண்ணுக்கே திருப்பி அனுப்புகிறீர்கள்.“மனிதர்களே, மண்ணுக்குத் திரும்புங்கள்!”+ என்று சொல்கிறீர்கள்.   ஆயிரம் வருஷங்கள் உங்களுடைய பார்வையில் நேற்றைய தினம் போலவும்,+கடந்துபோன ஜாமம்* போலவும் இருக்கின்றன.   அவர்களை நீங்கள் வாரிக்கொண்டு போகிறீர்கள்.+அவர்களுடைய வாழ்நாள் கொஞ்ச நேர தூக்கத்தைப் போல ஆகிவிடுகிறது.அவர்கள் காலையில் முளைக்கிற புல்லைப் போல இருக்கிறார்கள்.+   காலையில் அது பூ பூத்து தளதளவென்று இருக்கிறது.ஆனால், சாயங்காலத்துக்குள் வாடி வதங்கிவிடுகிறது.+   உங்களுடைய கோபம் எங்களைச் சுட்டுப்பொசுக்குகிறது.+உங்களுடைய கடும் கோபம் எங்களை நடுநடுங்க வைக்கிறது.   எங்கள் குற்றங்களை உங்கள் கண் முன்னால் நிறுத்தியிருக்கிறீர்கள்.+உங்கள் முகத்தின் ஒளி எங்களுடைய ரகசிய பாவங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது.+   உங்களுடைய ஆக்ரோஷத்தால் எங்களுடைய நாட்கள் குறைந்துவிடுகின்றன.எங்களுடைய வாழ்நாள் காலம் பெருமூச்சு போலச் சட்டென்று முடிந்துவிடுகிறது. 10  எங்களுடைய ஆயுள் 70 வருஷம்,நிறைய தெம்பு* இருந்தால் 80 வருஷம்.+ ஆனால், அவை துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன.அவை வேகமாக ஓடிவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகிறோம்.+ 11  உங்களுடைய கோபத்தின் கடுமையை யாரால் புரிந்துகொள்ள முடியும்? உங்களுக்குக் காட்ட வேண்டிய பயபக்தியைப் போலவே அது அளவிட முடியாதது.+ 12  எங்கள் வாழ்நாட்களை நன்றாகப் பயன்படுத்துவதற்கு* கற்றுக்கொடுங்கள்.+அப்போதுதான், ஞானமுள்ள இதயத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம். 13  யெகோவாவே, திரும்பி வாருங்கள்!+ இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த நிலைமை?+ உங்களுடைய ஊழியர்களைப் பார்த்துப் பரிதாபப்படுங்கள்.+ 14  காலையிலே உங்களுடைய மாறாத அன்பினால் எங்களைத் திருப்தியாக்குங்கள்.+அப்போது, எங்கள் வாழ்நாளெல்லாம் சந்தோஷம் பொங்க ஆரவாரம் செய்வோம்.+ 15  நீங்கள் எங்களுக்குக் கஷ்டம் கொடுத்த நாட்களுக்கும்,நாங்கள் பாடுகளை அனுபவித்த வருஷங்களுக்கும்+ ஈடாகஎங்களைச் சந்தோஷப்படுத்துங்கள்.+ 16  உங்களுடைய ஊழியர்கள் உங்கள் செயல்களைப் பார்க்கட்டும்.அவர்களுடைய பிள்ளைகள் உங்களுடைய மேன்மையைப் பார்க்கட்டும்.+ 17  எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களுடைய கருணை எங்கள்மேல் தங்கட்டும். நாங்கள் செய்கிறவற்றில் எங்களுக்கு வெற்றி தாருங்கள். நாங்கள் செய்கிறவற்றில் தயவுசெய்து எங்களுக்கு வெற்றி தாருங்கள்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “அடைக்கலமாக.”
வே.வா., “பிரசவ வேதனையோடு பெற்றெடுப்பதற்கு.”
வே.வா., “நித்திய நித்தியமாக.”
ராத்திரியில் நான்கு ஜாமங்கள் உண்டு. ஒவ்வொரு ஜாமமும் சுமார் 4 மணிநேரங்கள் கொண்டவை.
வே.வா., “அசாதாரண பலம்.”
நே.மொ., “வாழ்நாட்களை எண்ணுவதற்கு.”