சங்கீதம் 92:1-15

  • யெகோவா என்றென்றும் உயர்ந்தவர்

    • அவருடைய அற்புதமான செயல்களும் ஆழமான யோசனைகளும் (5)

    • ‘நீதிமான்கள் மரம்போல் செழித்து வளருவார்கள்’ (12)

    • வயதானவர்கள் திடமாகவே இருப்பார்கள் (14)

சங்கீதம். ஓய்வுநாளில் பாட வேண்டிய பாடல். 92  யெகோவாவே, உங்களுக்கு நன்றி சொல்வது நல்லது.+உன்னதமான கடவுளே, உங்கள் பெயரைப் புகழ்ந்து பாடுவது* நல்லது.   காலை நேரங்களில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றியும்,+ராத்திரி நேரங்களில் உங்களுடைய உண்மைத்தன்மையைப் பற்றியும்,   பத்து நரம்புகள் கொண்ட இசைக்கருவியோடும் தம்பூராவோடும்யாழின் இனிமையான ஓசையோடும் புகழ்ந்து பாடுவது நல்லது.+   யெகோவாவே, உங்கள் செயல்களால் என்னைப் பூரித்துப்போக வைத்தீர்கள்.உங்கள் கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பார்த்து நான் சந்தோஷ ஆரவாரம் செய்கிறேன்.   யெகோவாவே, உங்களுடைய செயல்கள் எவ்வளவு அற்புதமானவை!+ உங்களுடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!+   புத்தியில்லாத எந்த மனிதனாலும் அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது.முட்டாள்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இதுதான்:+   பொல்லாதவர்கள் களைகளை* போல முளைக்கும்போதும்,அக்கிரமக்காரர்கள் எல்லாரும் செழிக்கும்போதும்,அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம்.+   யெகோவாவே, நீங்கள்தான் என்றென்றுமே உயர்ந்தவர்.   யெகோவாவே, வெற்றிப் பெருமிதத்தோடு உங்கள் எதிரிகளைப் பாருங்கள்!அவர்கள் கண்டிப்பாக அழிந்துபோவார்கள்!அக்கிரமக்காரர்கள் எல்லாரும் சிதறடிக்கப்படுவார்கள்.+ 10  ஆனால், நீங்கள் என் பலத்தைக் காட்டெருதின் பலத்தைப் போலாக்குவீர்கள்.*நான் என் சருமத்தில் புது* எண்ணெயைப் பூசுவேன்.+ 11  என்னுடைய எதிரிகளை என் கண்கள் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்.+என்னைத் தாக்குகிற அக்கிரமக்காரர்களுக்கு வரும் வீழ்ச்சியைப் பற்றி என் காதுகள் கேட்கும். 12  ஆனால், நீதிமான்கள் பேரீச்ச மரம் போலச் செழித்து வளருவார்கள்.லீபனோனில் இருக்கிற தேவதாரு மரம் போல ஓங்கி வளருவார்கள்.+ 13  அவர்கள் யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறார்கள்.நம் கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளருகிறார்கள்.+ 14  வயதான* காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள்.+துடிப்பாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.+ 15  யெகோவா நேர்மையானவர் என்று அறிவிப்பார்கள். அவரே என் கற்பாறை,+ அவரிடம் அநீதியே கிடையாது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைப்பது.”
வே.வா., “புற்களை.”
நே.மொ. “நீங்கள் என் கொம்பைக் காட்டெருதின் கொம்பைப் போல உயர்த்துவீர்கள்.”
வே.வா., “புத்துணர்ச்சி தரும்.”
வே.வா., “முடி நரைத்துப்போன.”