சங்கீதம் 93:1-5

  • யெகோவாவின் மகத்தான ஆட்சி

    • “யெகோவா ராஜாவாகிவிட்டார்!” (1)

    • ‘உங்கள் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை’ (5)

93  யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ மகத்துவத்தை ஆடைபோல் அவர் அணிந்திருக்கிறார்.பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறார்.யெகோவா அதை இடுப்புவார் போலக் கட்டியிருக்கிறார். பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.அதை அசைக்கவே முடியாது.   கடவுளே, பல காலத்துக்கு முன்பே உங்கள் சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.+காலம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள்.+   ஆறுகள் பொங்கியெழுந்தன,யெகோவாவே, ஆறுகள் பொங்கியெழுந்தன, சீறிப்பாய்ந்தன.அவை பொங்கியெழுந்துகொண்டே இருக்கின்றன,இரைச்சல் போட்டுக்கொண்டே இருக்கின்றன.   ஆனால், வெள்ளப்பெருக்கின் முழக்கத்தைவிடவும், மோதியடிக்கும் கடல் அலைகளைவிடவும்+பலம்படைத்தவராக இருக்கும் யெகோவா பரலோகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.+   யெகோவாவே, உங்களுடைய நினைப்பூட்டுதல்கள் மிகவும் நம்பகமானவை.+ உங்களுடைய ஆலயம் என்றென்றும் பரிசுத்தத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.+

அடிக்குறிப்புகள்