சங்கீதம் 98:1-9

  • யெகோவாவே மீட்பர், நீதி தவறாத நீதிபதி

    • யெகோவா தரும் மீட்பு தெரியப்படுத்தப்படுகிறது (2, 3)

ஒரு சங்கீதம். 98  யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+ஏனென்றால், அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்.+ அவருடைய பரிசுத்தமான வலது கை மீட்பைத் தந்திருக்கிறது.*+   யெகோவா, தன் மீட்பைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.+தன் நீதியைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.+   மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்திருக்கிறார்.+ நம் கடவுள் தந்த மீட்பை* பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள்.+   பூமியில் இருக்கிறவர்களே, யெகோவாவுக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்யுங்கள். சந்தோஷப் பூரிப்போடு ஆரவாரம் செய்யுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+   யாழ் இசைத்து யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.யாழின் இசையோடும் இனிமையான பாடலோடும் அவரைப் புகழுங்கள்.   எக்காளங்களை முழங்கி, ஊதுகொம்பை ஊதி,+ராஜாவாகிய யெகோவாவுக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்யுங்கள்.   கடலும் அதில் நிறைந்திருப்பவையும்,பூமியும் அதில் குடியிருப்பவர்களும் முழக்கம் செய்யட்டும்.   ஆறுகள் கை தட்டி மகிழட்டும்.மலைகள் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குமுன் சந்தோஷமாகப் பாடட்டும்.+   ஏனென்றால், பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க யெகோவா வருகிறார்.* அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது.”
வே.வா., “பெற்ற வெற்றியை.”
வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
வே.வா., “வந்துவிட்டார்.”