நாகூம் 1:1-15
1 நினிவே நகரத்துக்கு எதிரான தீர்ப்பைப்+ பற்றி எல்கோசைச் சேர்ந்த நாகூம்* பார்த்த தரிசனத்தின் புத்தகம்:
2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+
யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.
3 யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மகா வல்லமை உள்ளவர்.+கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுக்கத் தவறாதவர்.+
யெகோவா வரும்போது அழிவு உண்டாக்குகிற சுழல்காற்றும் புயல்காற்றும் வீசும்.மேகங்கள் அவருடைய காலடி தூசிபோல் ஆகும்.+
4 அவர் கடலை அதட்டி,+ அதை வற்றச் செய்கிறார்.ஆறுகளையெல்லாம் வறண்டுபோக வைக்கிறார்.+
பாசானும் கர்மேலும் காய்ந்துபோகின்றன.+லீபனோனின் பூக்கள் வாடிப்போகின்றன.
5 அவருடைய கோபத்தால் மலைகள் அதிர்கின்றன.குன்றுகள் உருகுகின்றன.+
அவருக்கு முன்னால் பூமி குலுங்கும்.அவர் உலகத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் உலுக்குவார்.+
6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+
அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+
அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.
7 யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+
அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+
8 ஆனால், நினிவே நகரத்தைப் பெரிய வெள்ளத்தால் அடியோடு அழித்துவிடுவார்.அவருடைய எதிரிகளை இருள் துரத்தும்.
9 யெகோவாவுக்கு எதிராக நீங்கள் என்ன திட்டம் தீட்டுவீர்கள்?
அவர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்போகிறார்.
அழிவு* மறுபடியும் வராது.+
10 பின்னிக் கிடக்கிற முட்புதர்களைப் போல நினிவே ஜனங்கள் இருக்கிறார்கள்.போதை ஏறுமளவுக்கு மது* குடித்தவர்களைப் போல இருக்கிறார்கள்.ஆனால், வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள்.
11 யெகோவாவுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறவன் உன்னிடமிருந்து வருவான்.ஒன்றுக்கும் உதவாத அறிவுரையைத் தருவான்.
12 யெகோவா சொல்வது இதுதான்:
“அசீரியர்களின்* படையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மகா பலசாலிகள்.ஆனாலும் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள், ஒழிந்துபோவார்கள்.*
யூதாவே, நான் உனக்குக் கஷ்டம் கொடுத்தேன்; இனி அப்படிச் செய்ய மாட்டேன்.
13 அசீரியன்* உன் கழுத்தில் வைத்திருக்கும் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.+உன்னைக் கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்தெறிவேன்.
14 அசீரியாவே, யெகோவாவின் தீர்ப்பைக் கேள்:‘இனி உன் பெயர் நிலைக்காது.
உன் கோயில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைப்பேன்.
உனக்குக் கல்லறையை வெட்டுவேன், ஏனென்றால் நீ வெறுக்கத்தக்கவன்.’
15 நல்ல செய்தி சொல்கிறவர் மலைகள்மேல் ஏறி வருகிறார்.சமாதானம் கிடைக்கப்போகிறது என்று அறிவிக்கிறார்.+
யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து.வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான்.
அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”
அடிக்குறிப்புகள்
^ அர்த்தம், “ஆறுதல் தருபவர்.”
^ வே.வா., “இக்கட்டு; வேதனை.”
^ அதாவது, “கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர்.”
^ நே.மொ., “அவர்களின்.”
^ அல்லது, “அதன்பின் அவர் கடந்துபோவார்.”
^ நே.மொ., “அவன்.”