நியாயாதிபதிகள் 2:1-23

  • யெகோவாவின் தூதரிடமிருந்து ஓர் எச்சரிக்கை (1-5)

  • யோசுவா இறந்துபோகிறார் (6-10)

  • இஸ்ரவேலர்களைக் காப்பதற்காக நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (11-23)

2  பின்பு, யெகோவாவின் தூதர்+ கில்காலிலிருந்து+ போகீமுக்கு வந்து, “நான் உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன். உங்களோடு செய்த ஒப்பந்தத்தை ஒருபோதும் முறிக்க மாட்டேன்+ என்று உங்களிடம் சொன்னேன்.  அதோடு, ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது,+ அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?  அதனால்தான் நான் உங்களிடம், ‘மற்ற தேசத்தாரை உங்களிடமிருந்து நான் துரத்தியடிக்க மாட்டேன்.+ அவர்கள் உங்களை ஆபத்தில் சிக்க வைப்பார்கள்.+ அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருக்கும்’+ என்று சொன்னேன்” என்றார்.  இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் யெகோவாவின் தூதர் இதைச் சொன்னபோது, அவர்கள் சத்தமாக அழ ஆரம்பித்தார்கள்.  அதனால் அந்த இடத்துக்கு போகீம்* என்று பெயர் வைத்து, அங்கே யெகோவாவுக்குப் பலி செலுத்தினார்கள்.  பின்பு யோசுவா இஸ்ரவேலர்களை அனுப்பி வைத்தார். அவரவர் இடத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள்.+  யோசுவாவின் காலத்திலும் அவருக்குப்பின் உயிரோடிருந்த பெரியோர்களின்* காலத்திலும், அதாவது இஸ்ரவேலுக்காக யெகோவா செய்த எல்லா அற்புதங்களையும் கண்களால் பார்த்த பெரியோர்களின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கிவந்தார்கள்.+  பின்பு, நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+  அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-ஏரேசில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ 10  அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் இறந்துபோனார்கள்.* அவர்களுக்குப்பின் வந்த தலைமுறைக்கு யெகோவாவைப் பற்றியும், இஸ்ரவேலர்களுக்கு அவர் செய்தவற்றைப் பற்றியும் தெரியவில்லை. 11  அதனால், அவர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து, பாகால்களைக் கும்பிட்டார்கள்.+ 12  எகிப்திலிருந்து தங்களைக் கூட்டிக்கொண்டு வந்த தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.+ அவற்றை வணங்கி, யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.+ 13  யெகோவாவை விட்டுவிட்டு பாகால் சிலைகளையும் அஸ்தரோத் சிலைகளையும் கும்பிட்டார்கள்.+ 14  அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+ 15  யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னபடியே,+ அவர்கள் போன இடமெல்லாம் யெகோவா அவர்களுக்கு விரோதமாக இருந்தார். அவர்களுக்குக் கேடுதான் வந்தது.+ அவர்கள் மன வேதனையில் துடித்தார்கள்.+ 16  அதனால், எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற யெகோவா நியாயாதிபதிகளை நியமித்தார்.+ 17  ஆனால், அந்த நியாயாதிபதிகளின் பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. மற்ற தெய்வங்களை வணங்கி யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த முன்னோர்களின் வழியைவிட்டு சீக்கிரமாக விலகிப்போனார்கள்.+ அந்த முன்னோர்களைப் போல அவர்கள் நடக்கவில்லை. 18  அவர்களுக்காக யெகோவா ஒரு நியாயாதிபதியை நியமித்தபோதெல்லாம்,+ யெகோவா அந்த நியாயாதிபதியோடு இருந்து, அவருடைய காலம் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், கொடுமைக்காரர்களின் கொடுமை+ தாங்காமல் அவர்கள் குமுறியதைக் கேட்டு யெகோவா மனம் உருகினார்.*+ 19  ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதி இறந்த பிறகும் அவர்கள் பழையபடி மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கி, தங்களுடைய முன்னோர்களைவிட படுமோசமாக நடக்க ஆரம்பித்தார்கள்.+ கெட்ட பழக்கங்களையும் பிடிவாத குணத்தையும் அவர்கள் விடவே இல்லை. 20  கடைசியில், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது.+ அதனால் அவர், “இந்த ஜனங்கள் அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த ஒப்பந்தத்தை+ மீறி, எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ 21  அதனால், யோசுவா சாகும்போது விட்டுவைத்திருந்த ஒரு தேசத்தாரைக்கூட+ அவர்கள் முன்னாலிருந்து நான் துரத்த மாட்டேன். 22  இஸ்ரவேலர்கள் அவர்களுடைய முன்னோர்களைப் போல யெகோவாவின் வழியில் நடக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்காக+ அப்படிச் செய்வேன்” என்று சொன்னார். 23  அதன்படியே, யெகோவா மற்ற தேசத்து ஜனங்களை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டார். அவர்களை உடனடியாகத் துரத்தியடிக்கவும் இல்லை, யோசுவாவின் கையில் கொடுக்கவும் இல்லை.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “அழுகிறவர்கள்.”
வே.வா., “மூப்பர்களின்.”
நே.மொ., “தங்கள் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்கள்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “விற்றுப்போட்டார்.”
வே.வா., “வருந்தினார்.”