நீதிமொழிகள் 1:1-33

  • நீதிமொழிகள் எழுதப்பட்டதற்கான காரணம் (1-7)

  • கெட்ட சகவாசத்தால் வரும் ஆபத்துகள் (8-19)

  • உண்மையான ஞானம் பொது இடங்களில் நின்று அழைக்கிறது (20-33)

1  தாவீதின் மகனும்+ இஸ்ரவேலின் ராஜாவுமான+ சாலொமோனின் நீதிமொழிகள்:+   இவை ஞானத்தையும்+ புத்திமதியையும் புகட்டுவதற்கும்,ஆழமான கருத்துகளைப் புரிய வைப்பதற்கும்,   விவேகத்தோடும்* நீதியோடும்+ நியாயத்தோடும்+நேர்மையோடும் நடப்பதற்குத் தேவையான புத்திமதியைக்+ கொடுப்பதற்கும்,   அனுபவமில்லாதவர்களைச் சாமர்த்தியசாலிகளாக+ ஆக்குவதற்கும்,இளைஞர்களுக்கு அறிவையும் யோசிக்கும் திறனையும்+ தருவதற்கும் எழுதப்பட்டிருக்கின்றன.   ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்.+புத்தியுள்ளவர்கள்* திறமையான வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.+   நீதிமொழியையும் விடுகதையையும்* அவர்கள் புரிந்துகொள்வார்கள்.ஞானமுள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளையும் புதிர்களையும்+ புரிந்துகொள்வார்கள்.   யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+   என் மகனே, உன் அப்பா சொல்கிற புத்திமதியைக் கேள்,+உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+   அவை உன்னுடைய தலைக்கு அலங்காரக் கிரீடம்போல் இருக்கும்,+உன்னுடைய கழுத்துக்கு அழகான நகைபோல் இருக்கும்.+ 10  என் மகனே, பாவிகள் உனக்கு ஆசை காட்டினாலும் நீ இணங்கிவிடாதே.+ 11  அவர்கள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் பதுங்கியிருந்து தாக்கலாம். ஒளிந்திருந்து அப்பாவிகளைத் தீர்த்துக்கட்டலாம். 12  கல்லறை விழுங்குவதுபோல் அவர்களை உயிரோடு விழுங்கலாம்.சவக்குழிக்குள் போகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுவதுமாக விழுங்கலாம். 13  அவர்களிடம் இருக்கிற எல்லா பொக்கிஷங்களையும் சுருட்டிக்கொள்ளலாம்.கொள்ளையடித்த பொருள்களால் நம் வீடுகளை நிரப்பலாம். 14  நீயும் எங்களோடு சேர்ந்துகொள்,கொள்ளையடிப்பதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம்” என்றெல்லாம் சொன்னால், 15  என் மகனே, நீ அவர்கள் பின்னால் போகாதே. அவர்களுடைய வழியில் கால்வைக்காதே.+ 16  ஏனென்றால், அவர்களுடைய கால்கள் அக்கிரமம் செய்வதற்கு ஓடுகின்றன. கொலை செய்வதற்கு வேகமாகப் போகின்றன.+ 17  பறவையைப் பிடிக்க அதன் கண் முன்னாலேயே வலை விரிப்பது வீண். 18  அதனால்தான், அவர்கள் கொலை செய்வதற்குப் பதுங்கியிருக்கிறார்கள்.மற்றவர்களுடைய உயிரைப் பறிப்பதற்கு ஒளிந்திருக்கிறார்கள். 19  குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க விரும்புகிற எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்.அது அவர்களுடைய உயிரையே பறித்துவிடும்.+ 20  உண்மையான ஞானம்+ வீதியில் நின்று சத்தமாக அழைக்கிறது.+ பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது.+ 21  சந்தடியான தெரு முனைகளில் நின்று முழங்குகிறது. நகரவாசல்களில் நின்று இப்படிச் சொல்கிறது:+ 22  “அனுபவமில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுவீர்கள்? கேலி செய்கிறவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கேலி செய்வதில் சந்தோஷப்படுவீர்கள்? அறிவில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அறிவை வெறுப்பீர்கள்?+ 23  நான் கண்டிப்பதைக் கேட்டுத் திருந்துங்கள்.+அப்போது, என் சக்தியை உங்கள்மேல் பொழிவேன். என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.+ 24  நான் உங்களைக் கூப்பிட்டேன், ஆனால் நீங்கள் வரவே இல்லை.என் கையை நீட்டினேன், ஆனால் யாரும் கவனிக்கவே இல்லை.+ 25  என்னுடைய எல்லா ஆலோசனைகளையும் அலட்சியம் செய்தீர்கள்.நான் கண்டித்தபோது நீங்கள் காதில் வாங்கவே இல்லை. 26  அதனால், உங்களுக்குப் பேரழிவு வரும்போது நான் கைகொட்டிச் சிரிப்பேன்.எந்த ஆபத்தை நினைத்துப் பயந்து நடுங்குகிறீர்களோ அது வரும்போது நான் கேலி செய்வேன்.+ 27  நீங்கள் பயந்து நடுங்குகிற ஆபத்து புயல்போல் வரும்போது,பேரழிவு சூறாவளிபோல் வரும்போது,துன்பமும் துயரமும் உங்களைத் தாக்கும்போது, உங்களைப் பார்த்து சிரிப்பேன். 28  அப்போது, அவர்கள் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள், ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்.ஆர்வத்தோடு என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.+ 29  ஏனென்றால், அவர்கள் அறிவை வெறுத்தார்கள்.+யெகோவாவுக்குப் பயப்படாமல் இருந்தார்கள்.+ 30  நான் ஆலோசனை சொன்னபோது அதைக் கேட்கவில்லை.நான் கண்டித்தபோது அதைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. 31  அதனால், அவர்களுடைய நடத்தைக்குத் தகுந்த கூலியைப் பெறுவார்கள்.+அவர்களுடைய சதித்திட்டங்களால் வரும் விளைவுகளை முழுமையாக அனுபவிப்பார்கள்.* 32  அனுபவமில்லாதவர்களின் தாறுமாறான போக்கு அவர்களுடைய உயிரைப் பறித்துவிடும்.முட்டாள்களின் அலட்சியப் போக்கு அவர்களை அழித்துவிடும். 33  ஆனால், நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான்.+ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள்.”
வே.வா., “நீதிக்கதையையும்.”
வே.வா., “பயபக்தி காட்டுவதே.”
வே.வா., “தங்களுடைய சதித்திட்டங்களால் திக்குமுக்காடிப்போவார்கள்.”