நீதிமொழிகள் 15:1-33
15 சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும்.+ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.+
2 ஞானமுள்ளவர்களின் நாவு அறிவோடு பேசுகிறது.*+ஆனால், முட்டாள்களின் வாய் முட்டாள்தனமாகவே பேசுகிறது.
3 யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+
4 சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது.+ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது.
5 முட்டாள் தன் அப்பாவின் புத்திமதியை அலட்சியம் செய்கிறான்.+ஆனால், சாமர்த்தியசாலி கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறான்.+
6 நீதிமானின் வீட்டில் ஏராளமான பொக்கிஷம் இருக்கிறது.ஆனால், பொல்லாதவனின் வருமானம் அவனுக்குக் கஷ்டத்தைத்தான் கொடுக்கிறது.+
7 ஞானியின் உதடுகள் அறிவை வாரி இறைக்கும்.+ஆனால், முட்டாளின் இதயம் அப்படிச் செய்யாது.+
8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+
9 பொல்லாதவன் போகிற பாதையை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், நீதியை நாடுகிறவனை அவர் நேசிக்கிறார்.+
10 நேர்வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி கசப்பாக இருக்கிறது.*+ஆனால், கண்டிப்பை வெறுக்கிறவன் உயிரை இழப்பான்.+
11 யெகோவாவின் கண்கள் கல்லறையையும் புதைகுழியையும்கூட ஊடுருவிப் பார்க்கிறதென்றால்,+
மனிதர்களின் இதயத்தைப் பார்க்காமல் இருக்குமா?+
12 கேலி செய்கிறவன் தன்னைக் கண்டிப்பவரை வெறுக்கிறான்.+
ஞானமுள்ளவர்களிடம் அவன் ஆலோசனை கேட்க மாட்டான்.+
13 உள்ளத்தின் மகிழ்ச்சியால் முகம் மலர்ச்சி அடையும்.ஆனால், உள்ளத்தின் வேதனையால் மனம் நொந்துபோகும்.+
14 புரிந்துகொள்ளும் இதயம் அறிவைத் தேடும்.+ஆனால், முட்டாளின் வாய் முட்டாள்தனத்தை நாடும்.*+
15 கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான்.+ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு* எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.+
16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+
17 வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட,*+அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.+
18 எளிதில் கோபப்படுகிறவன் சண்டையைக் கிளப்புகிறான்.+ஆனால், சீக்கிரத்தில் கோபப்படாதவன் வாக்குவாதத்தைத் தீர்க்கிறான்.+
19 சோம்பேறியின் வழி முள்வேலியைப் போல் இருக்கிறது.+ஆனால், நேர்மையானவனின் பாதை சீரான நெடுஞ்சாலையைப் போல் இருக்கிறது.+
20 ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், புத்தியில்லாதவன் தன்னுடைய அம்மாவை அவமதிக்கிறான்.+
21 புத்தியில்லாதவன் முட்டாள்தனமாக நடப்பதில் சந்தோஷப்படுகிறான்.+ஆனால், பகுத்தறிவு உள்ளவன் நேரான பாதையில் நடக்கிறான்.+
22 கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்.ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+
23 சரியான பதிலைச் சொல்கிறவனுக்குச் சந்தோஷம் கிடைக்கும்.+சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!+
24 வாழ்வின் வழி விவேகமுள்ளவனை முன்னேறிச் செல்ல வைக்கிறது.+அவனைக் கல்லறைக்குப் போகாதபடி காப்பாற்றுகிறது.+
25 கர்வமுள்ளவர்களின் வீட்டை யெகோவா தரைமட்டமாக்குவார்.+ஆனால், விதவைப் பெண்ணுடைய நிலத்தின் எல்லையைப் பாதுகாப்பார்.+
26 பொல்லாதவன் போடும் சதித்திட்டங்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவை.+ஆனால், இனிய வார்த்தைகள் அவருக்குப் பிரியமானவை.+
27 குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் தன் குடும்பத்துக்குப் பிரச்சினையை* கொண்டுவருகிறான்.+ஆனால், லஞ்சத்தை வெறுப்பவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.+
28 நீதிமானின் இதயம் பதில் சொல்வதற்கு முன்னால் யோசிக்கும்.*+ஆனால், பொல்லாதவனின் வாய் கெட்ட விஷயங்களை உளறிக்கொட்டும்.
29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+
30 பிரகாசமான கண்கள்* இதயத்தைப் பூரிப்பாக்கும்.நல்ல செய்தி எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும்.+
31 உயிர்காக்கும் கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன்,ஞானமுள்ளவர்கள் மத்தியில் குடியிருக்கிறான்.+
32 புத்திமதியை ஏற்றுக்கொள்ளாதவன் தன் உயிரை அலட்சியப்படுத்துகிறான்.+ஆனால், கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன் புத்தியை* சம்பாதிக்கிறான்.+
33 யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானமாக நடக்க பயிற்சி அளிக்கும்.+மனத்தாழ்மையாக இருந்தால் மதிப்பு மரியாதை கிடைக்கும்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “அறிவை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது.”
^ வே.வா., “கடுமையாகத் தோன்றுகிறது.”
^ வே.வா., “மேயும்.”
^ வே.வா., “நல்ல இதயம் உள்ளவனுக்கு.”
^ வே.வா., “குழப்பமாக.”
^ நே.மொ., “கொழுத்த காளையைவிட.”
^ வே.வா., “அவமானத்தை.”
^ வே.வா., “எப்படிப் பதில் சொல்வதென்று கவனமாகச் சிந்திக்கும்; பேசுவதற்கு முன்னால் யோசிக்கும்.”
^ வே.வா., “ஒருவரின் சந்தோஷப் பார்வை.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”