நீதிமொழிகள் 17:1-28

  • நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யாதே (13)

  • வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அங்கிருந்து போய்விடு (14)

  • உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான் (17)

  • “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து” (22)

  • பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான் (27)

17  சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+   விவேகமாக நடக்கும் வேலைக்காரன் வெட்கக்கேடாக நடக்கும் மகனை* ஆளுவான்.எஜமானின் மகன்களோடு அவனும் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவான்.   வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை.+ஆனால், இதயத்தை ஆராய்கிறவர் யெகோவா.+   புண்படுத்துகிற பேச்சைப் பொல்லாதவன் கவனித்துக் கேட்கிறான்.தீய பேச்சை ஏமாற்றுக்காரன் காதுகொடுத்துக் கேட்கிறான்.+   ஏழையைக் கிண்டல் செய்கிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+அடுத்தவன் படும் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறவன் தண்டனைக்குத் தப்ப மாட்டான்.+   வயதானவர்களுக்குக் கிரீடம் அவர்களுடைய பேரன்கள்.*மகன்களுக்கு* பெருமை அவர்களுடைய அப்பாக்கள்.*   சரியான பேச்சு* முட்டாளுக்குப் பொருந்துவதே இல்லை.+ அப்படியிருக்கும்போது, பொய்யான பேச்சு ராஜாவுக்கு* கொஞ்சமாவது பொருந்துமா?+   அன்பளிப்பு கொடுக்கிறவனுக்கு அது விலைமதிப்புள்ள* கல்லைப் போல இருக்கிறது.+அவன் போகும் இடமெல்லாம் அது அவனுக்கு வெற்றி தேடித்தருகிறது.+   குற்றத்தை மன்னிக்கிறவன்* அன்பு காட்டுகிறான்.+ஆனால், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+ 10  முட்டாளை நூறு தடவை அடிப்பதைவிட,+புத்தி* உள்ளவனை ஒரு தடவை எச்சரித்தாலே* நன்றாக உறைக்கும்.+ 11  கெட்டவன் எப்போதும் கலகத்தைத்தான் விரும்புவான்.ஆனால், அவனைத் தண்டிக்க கொடூரமான தூதுவன் அனுப்பப்படுவான்.+ 12  அறிவில்லாமல் நடக்கும் முட்டாளிடம் மாட்டிக்கொள்வதைவிட,குட்டிகளைப் பறிகொடுத்த கரடியிடம் மாட்டிக்கொள்வது எவ்வளவோ மேல்.+ 13  நன்மை செய்தவனுக்கு யாராவது தீமை செய்தால்,தீமை அவன் வீட்டைவிட்டு நீங்கவே நீங்காது.+ 14  சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது.வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.+ 15  குற்றவாளியை விடுதலை செய்கிறவனும் நிரபராதியைத் தண்டிப்பவனும்+யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 16  முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?அதைச் சம்பாதிக்கிற எண்ணம்* அவனுக்கு இல்லையே.+ 17  உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+ 18  அடுத்தவனுடைய கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு,*அவனுக்காகக் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்கிறவன் புத்தியில்லாதவன்.+ 19  வாக்குவாதம் செய்ய விரும்புகிறவன் குற்றம் செய்ய விரும்புகிறான்.+ தன் நுழைவாசலை உயரமாகக் கட்டுகிறவன் அழிவைத் தேடிக்கொள்கிறான்.+ 20  கோணலான புத்தி* உள்ளவன் எதிலும் வெற்றிபெற மாட்டான்.+பொய் புரட்டு பேசுகிறவன் நாசமாவான். 21  புத்தியில்லாத பிள்ளையைப் பெற்றவன் துக்கப்படுவான்.அறிவில்லாத பிள்ளையைப் பெற்றவன் சந்தோஷத்தைப் பறிகொடுப்பான்.+ 22  சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.+ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.*+ 23  பொல்லாதவன் ரகசியமாய் லஞ்சம் வாங்கி,நியாயத்தைப் புரட்டுகிறான்.+ 24  பகுத்தறிவு உள்ளவன் ஞானத்தைப் பெறுவதிலேயே கண்ணாக இருக்கிறான்.ஆனால், புத்தி இல்லாதவனின் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்கின்றன.+ 25  புத்தியில்லாத மகன் தன் அப்பாவின் மனதைத் துக்கப்படுத்துகிறான்,தன் அம்மாவின் உள்ளத்தை வேதனைப்படுத்துகிறான்.+ 26  நீதிமானைத் தண்டிப்பது* நல்லதல்ல.மதிப்பு மரியாதை உள்ளவர்களை அடிப்பது சரியல்ல. 27  அறிவுள்ளவன் அளவோடு பேசுவான்.+பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.+ 28  பேசாமல் இருந்தால் முட்டாள்கூட அறிவாளியாகக் கருதப்படுவான். வாய் திறக்காமல் இருப்பவன் பகுத்தறிவு உள்ளவனாகக் கருதப்படுவான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அமைதியான.”
அதாவது, “எஜமானின் மகனை.”
வே.வா., “பெற்றோர்கள்.”
வே.வா., “பிள்ளைகளுக்கு.”
வே.வா., “பேரப்பிள்ளைகள்.”
வே.வா., “நல்ல பேச்சு.”
வே.வா., “பெரிய மனிதனுக்கு.”
வே.வா., “தயவைப் பெற்றுத்தரும்.”
நே.மொ., “மூடுகிறவன்.”
வே.வா., “கண்டித்தாலே.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “புத்தி.”
வே.வா., “உத்தரவாதம் கொடுத்து.”
நே.மொ., “இதயம்.”
வே.வா., “எலும்புகளை உலர்ந்துபோகச் செய்யும்.”
வே.வா., “நீதிமானுக்கு அபராதம் விதிப்பது.”