நீதிமொழிகள் 21:1-31
21 ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல்* இருக்கிறது.
தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்.+
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+ஆனால், யெகோவாதான் இதயங்களை* ஆராய்கிறார்.+
3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்யெகோவா மிகவும் விரும்புகிறார்.+
4 அக்கிரமக்காரர்களின் பாதைக்கு விளக்குபோல் இருக்கிற ஆணவக் கண்களும்,அகம்பாவ இதயமும் பாவம் நிறைந்தவை.+
5 கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+
6 பொய் சொல்லி சம்பாதிக்கிற சொத்து,மறைந்துபோகும் மூடுபனி போன்றது, ஆபத்தான கண்ணி போன்றது.*+
7 பொல்லாதவர்கள் நியாயமாக நடக்க மறுக்கிறார்கள்.அதனால், அவர்கள் செய்கிற கொடுமைகளே அவர்களை வாரிக்கொண்டு போய்விடும்.+
8 குற்றமுள்ளவனின் வழி குறுக்கு வழி.ஆனால், குற்றமற்றவனின் வழி நேர்வழி.+
9 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+
10 பொல்லாதவன் கெட்டதைச் செய்யத் துடிக்கிறான்.+அடுத்தவனுக்கு அவன் கொஞ்சம்கூட கருணை காட்டுவது இல்லை.+
11 கேலி செய்கிறவனைத் தண்டிக்கும்போது அனுபவமில்லாதவனும் ஞானமுள்ளவனாக ஆகிறான்.ஞானமுள்ளவன் ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது* அறிவை அடைகிறான்.*+
12 நீதியுள்ள கடவுள் பொல்லாதவனின் வீட்டைக் கவனிக்கிறார்.பொல்லாதவர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுகிறார்.+
13 ஏழை கதறும்போது ஒருவன் காதுகளை அடைத்துக்கொண்டால்,அவன் கதறும்போதும் யாருமே கேட்க மாட்டார்கள்.+
14 ரகசியமாகக் கொடுக்கப்படுகிற அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்.+மறைவாகக் கொடுக்கப்படுகிற லஞ்சம் ஆக்ரோஷத்தை அடக்கும்.
15 நியாயமாக நடப்பது நீதிமானுக்குச் சந்தோஷம் தருகிறது.+ஆனால், அக்கிரமம் செய்கிறவனுக்கு அது கொடுமையாக இருக்கிறது.
16 விவேகமான வழியைவிட்டு விலகிப்போகிறவன்செத்துக் கிடப்பவர்களோடு* அமைதியாகக் கிடப்பான்.+
17 உல்லாசப் பிரியன் ஏழையாவான்.+திராட்சமதுவையும் எண்ணெயையும் விரும்புகிறவன் பணக்காரனாக மாட்டான்.
18 நீதிமானுக்குப் பொல்லாதவன் மீட்புவிலையாவான்.நேர்மையானவனுக்குத் துரோகி மீட்புவிலையாவான்.+
19 சண்டைக்காரியும்* கோபக்காரியுமான மனைவியோடு குடியிருப்பதைவிடவனாந்தரத்தில் வாழ்வதே மேல்.+
20 ஞானமுள்ளவனின் வீட்டில் அருமையான பொக்கிஷமும் எண்ணெயும் இருக்கும்.+ஆனால், முட்டாள் தன்னிடம் இருப்பதையெல்லாம் வெட்டியாகச் செலவழித்துவிடுவான்.+
21 நீதியையும் மாறாத அன்பையும் நாடுகிறவன்வாழ்வும், நீதியும், மகிமையும் பெறுவான்.+
22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+
23 தன் வாயையும் நாவையும் அடக்குகிறவன்பிரச்சினையில் சிக்காமல் இருப்பான்.+
24 அகங்காரத்தோடு* கண்மூடித்தனமாக நடக்கிறவன்,அகங்காரம்பிடித்த பெருமைக்காரன்+ என்று சொல்லப்படுகிறான்.
25 சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+
26 அவன் நாள் முழுவதும் பேராசையோடு ஏங்குகிறான்.ஆனால், நீதிமான் கஞ்சத்தனம் காட்டாமல் எல்லாவற்றையும் கொடுக்கிறான்.+
27 பொல்லாதவன் கொடுக்கிற பலி அருவருப்பானது என்றால்,+
கெட்ட எண்ணத்தோடு* அவன் கொடுக்கிற பலி இன்னும் எந்தளவுக்கு அருவருப்பானது!
28 பொய் சாட்சி சொல்கிறவன் அழிந்துபோவான்.+ஆனால், கவனமாகக் கேட்கிறவன் சரியாகச் சாட்சி சொல்வான்.*
29 பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாததுபோல் காட்டிக்கொள்கிறான்.+ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான வழி.+
30 யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை.+
31 போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “வாய்க்கால்கள்போல்.”
^ வே.வா., “உள்ளெண்ணங்களை.”
^ அல்லது, “சாவை விரும்புகிறவர்களுக்கு மறைந்துபோகும் மூடுபனி போன்றது.”
^ வே.வா., “நச்சரிக்கிற.”
^ வே.வா., “விவேகத்தைச் சம்பாதிக்கும்போது.”
^ வே.வா., “என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.”
^ வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களோடு.”
^ வே.வா., “நச்சரிக்கிறவளும்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ வே.வா., “வெட்கங்கெட்ட விதமாக நடந்துகொண்டு.”
^ நே.மொ., “என்றென்றும் பேசுவான்.”
^ வே.வா., “மீட்பு.”