நீதிமொழிகள் 26:1-28
26 கோடைக் காலத்துக்குப் பனியும், அறுவடைக் காலத்துக்கு மழையும் எப்படிப் பொருந்தாதோ,அப்படித்தான் முட்டாளுக்கும் மதிப்பு மரியாதை பொருந்தாது.+
2 காரணமில்லாமல் பறவை தப்பிக்காது, தகைவிலான் குருவியும் பறந்து போகாது.அதேபோல், காரணமில்லாமல் எந்தச் சாபமும் வராது.*
3 குதிரைக்குச் சாட்டையும் கழுதைக்குக் கடிவாளமும் தேவை.+அதேபோல், முட்டாளின் முதுகுக்குப் பிரம்படி தேவை.+
4 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்லாதே.நீ ஏன் அவன் அளவுக்கு இறங்கி வர வேண்டும்?*
5 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்.அவன் ஏன் தன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்?+
6 முட்டாளை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைப்பதும்,தன் காலையே முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு செய்துகொள்வதும் ஒன்றுதான்.
7 முட்டாள் சொல்கிற பழமொழியும்+கால் ஊனமானவனின் நொண்டிக் காலும்* ஒன்றுதான்.
8 கவணில் கல்லைக் கட்டுவதும்முட்டாளைப் புகழ்வதும் ஒன்றுதான்.+
9 முட்டாள் சொல்கிற பழமொழியும்குடிகாரன் கையில் இருக்கிற முட்செடியும் ஒன்றுதான்.
10 முட்டாளையோ முன்பின் தெரியாதவனையோ கூலிக்கு வைக்கிறவனும்,கண்மூடித்தனமாக அம்பு எறிந்து மற்றவர்களை* காயப்படுத்துகிறவனும் ஒன்றுதான்.
11 நாய் தான் கக்கியதையே திரும்பப் போய்த் தின்பதுபோல்,முட்டாளும் தான் செய்த முட்டாள்தனத்தையே திரும்பவும் செய்கிறான்.+
12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+
அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.
13 “வெளியில் ஒரு இளம் சிங்கம் சுற்றுகிறது,தெருவில் ஒரு பெரிய சிங்கம் அலைகிறது!” என்று சோம்பேறி சொல்கிறான்.+
14 கீலில்* கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல்,
சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+
15 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+
16 புத்திசாலித்தனமாகப் பதில் சொல்கிற ஏழு பேரைவிட,தானே ஞானி என்று சோம்பேறி நினைத்துக்கொள்கிறான்.
17 வழியிலே யாரோ சண்டை போடுவதைப் பார்த்து ஆவேசப்படுவதும்,*நாயின் காதுகளைப் பிடிப்பதும் ஒன்றுதான்.+
18 தீ பறக்கும் ஆயுதங்களையும் கொடிய* அம்புகளையும் எறிகிற பைத்தியக்காரனைப் போலத்தான்,
19 அடுத்தவனை ஏமாற்றிவிட்டு, “விளையாட்டுக்காகச் செய்தேன்!” என்று சொல்கிறவனும் இருக்கிறான்.+
20 விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் இல்லையென்றால் சண்டை சச்சரவுகள் அடங்கிவிடும்.+
21 கரியும் விறகும் நெருப்பை மூட்டிவிடுவதுபோல்,சண்டைக்காரன் வாக்குவாதங்களை மூட்டிவிடுகிறான்.+
22 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+
23 உள்ளத்தில் பகையும் உதட்டில் பாசமும் காட்டுகிறவன்வெள்ளி முலாம் பூசப்பட்ட மண் ஓடுபோல் இருக்கிறான்.+
24 ஒருவன் இனிக்க இனிக்கப் பேசி தன் பகையை மூடி மறைக்கிறான்.ஆனால், உள்ளத்தில் வஞ்சனையை வளர்க்கிறான்.
25 அவன் தேனொழுகப் பேசினாலும் நம்பிவிடாதே.ஏனென்றால், அருவருப்பான ஏழு விஷயங்கள் அவன் உள்ளத்தில் இருக்கின்றன.*
26 என்னதான் நயவஞ்சகமாக அவன் தன் பகையை மறைத்தாலும்,அவனுடைய கெட்ட எண்ணம் சபையில் வெட்டவெளிச்சமாகும்.
27 ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+
28 பொய் பேசுகிற நாவு, தான் புண்படுத்தியவர்களை வெறுக்கிறது.பொய்யாகப் புகழ்கிற வாய், அழிவை உண்டாக்குகிறது.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “காரணமில்லாமல் விடுகிற சாபம் பலிக்காது.”
^ வே.வா., “நீ ஏன் அவனுக்குச் சமமாய் ஆக வேண்டும்?”
^ வே.வா., “தள்ளாடுகிற காலும்.”
^ வே.வா., “எல்லாரையும்.”
^ கீல் என்பது கதவைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பட்டை.
^ அல்லது, “தேவையில்லாமல் தலையிடுவதும்.”
^ வே.வா., “உயிரைப் பறிக்கும்.”
^ வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”
^ வே.வா., “ஏனென்றால், அவனுடைய உள்ளம் முழுவதும் அருவருப்பானது.”