நீதிமொழிகள் 29:1-27
29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+
2 நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+
3 ஞானத்தை விரும்புகிறவன் தன்னுடைய அப்பாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், விபச்சாரிகளிடம் போகிறவன் தன் சொத்தை வீணடிக்கிறான்.+
4 அரசன் நியாயமாக நடந்தால் தேசம் நிலைநிற்கும்.+ஆனால், லஞ்சம் வாங்க விரும்புகிறவனால் அது சீரழியும்.
5 அடுத்தவனைப் போலியாகப் புகழ்கிறவன்அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.+
6 கெட்டவன் செய்கிற குற்றமே அவனுக்குக் கண்ணியாகிவிடுகிறது.+ஆனால், நீதிமான் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறான்.+
7 ஏழைகளின் சட்டப்பூர்வ உரிமைகள்மேல் நீதிமான் அக்கறை காட்டுகிறான்.+ஆனால், பொல்லாதவன் அப்படிப்பட்ட அக்கறையைக் காட்டுவதே இல்லை.+
8 பெருமையடிக்கிறவர்கள் கோபத் தீயை ஊருக்குள் கிளறிவிடுகிறார்கள்.+ஆனால், ஞானமாக நடக்கிறவர்கள் அதைத் தணிக்கிறார்கள்.+
9 ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும்.+
10 இரத்தவெறி பிடித்தவர்கள் அப்பாவிகளை* வெறுக்கிறார்கள்.+நேர்மையானவர்களின் உயிரைப் பறிக்க அவர்கள் வழி தேடுகிறார்கள்.*
11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+
12 ஆட்சி செய்கிறவன் பொய்யான விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டால்,அவனுடைய ஊழியர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாக இருப்பார்கள்.*+
13 ஏழைக்கும் அடக்கி ஒடுக்குகிறவனுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.
அவர்கள் இரண்டு பேருடைய கண்களுக்கும் யெகோவாதான் வெளிச்சம் கொடுக்கிறார்.*
14 ஒரு ராஜா ஏழைகளுக்கு நீதி வழங்கினால்,+அவருடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+
15 பிரம்பும்* கண்டிப்பும் ஞானத்தைப் புகட்டும்.+ஆனால், பிள்ளையை அவனுடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அம்மாவுக்கு அவமானம்தான் வரும்.
16 பொல்லாதவர்கள் பெருகினால் குற்றங்களும் பெருகும்.ஆனால், அவர்களுடைய வீழ்ச்சியை நீதிமான்கள் பார்ப்பார்கள்.+
17 உன் மகனைக் கண்டித்து வளர்த்தால் உனக்கு நிம்மதி கிடைக்கும்.அவனால் அளவில்லாத சந்தோஷமும் கிடைக்கும்.+
18 கடவுளுடைய வழிநடத்துதல்* இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள்.+ஆனால், கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
19 வெறும் வார்த்தைகளால் வேலைக்காரன் திருந்த மாட்டான்.அவற்றைப் புரிந்துகொண்டாலும் அவன் கீழ்ப்படிய மாட்டான்.+
20 அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறவனைப் பார்த்திருக்கிறாயா?+
அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.+
21 வேலைக்காரனுக்குச் சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்துவந்தால்,பிற்பாடு நன்றிகெட்டவனாக ஆகிவிடுவான்.
22 கோபக்காரன்* சண்டையைக் கிளப்புகிறான்.+ஆவேசப்படுகிறவன்* நிறைய குற்றங்களைச் செய்துவிடுகிறான்.+
23 மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.+ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.+
24 திருடனுடைய கூட்டாளி தன்னையே வெறுக்கிறான்.
குற்றத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கேட்டும், அவன் தெரிவிக்காமல் இருந்துவிடுகிறான்.+
25 மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+
26 அரசனைச் சந்தித்து நீதி கேட்க* நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள்.ஆனால், யெகோவாதான் ஒருவனுக்கு நியாயம் வழங்குகிறார்.+
27 அநியாயம் செய்கிறவனை நீதிமான் அருவருக்கிறான்.+ஆனால், நேர்மையாக நடக்கிறவனைப் பொல்லாதவன் அருவருக்கிறான்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “குற்றமற்றவர்களை.”
^ அல்லது, “நேர்மையானவர்களோ தங்களுடைய உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.”
^ வே.வா., “ஆகிவிடுவார்கள்.”
^ அதாவது, “யெகோவா அவர்களுக்கு உயிர் கொடுக்கிறார்.”
^ வே.வா., “புத்திமதியும்; தண்டனையும்.”
^ வே.வா., “தரிசனம்; வெளிப்படுத்துதல்.”
^ வே.வா., “ஆவேசப்படும் சுபாவமுள்ளவன்.”
^ வே.வா., “கோபப்படும் சுபாவமுள்ளவன்.”
^ அல்லது, “அரசனின் தயவைப் பெற.”