நீதிமொழிகள் 3:1-35

  • ஞானமாக நடந்து, யெகோவாவை நம்பு (1-12)

    • மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை மகிமைப்படுத்து (9)

  • ஞானம் சந்தோஷத்தைத் தரும் (13-18)

  • ஞானம் பாதுகாப்பைத் தரும் (19-26)

  • மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை (27-35)

    • மற்றவர்களுக்கு நல்லது செய்ய முடிந்தால் செய்ய வேண்டும் (27)

3  என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி.   அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+   மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் விட்டுவிடாதே.+ அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+   அப்போது, கடவுள் பார்வையிலும் மனிதர்கள் பார்வையிலும்,நீ பிரியமானவனாகவும், மிகுந்த விவேகம் உள்ளவனாகவும் இருப்பாய்.+   யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு.+உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.*+   எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.+அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.+   நீயே உன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ளாதே.+ யெகோவாவுக்குப் பயந்து நட, தீமையை விட்டு விலகு.   அப்போது, உன் உடல் ஆரோக்கியம் அடையும்,உன் எலும்புகள் புதுத்தெம்பு பெறும்.   உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்துயெகோவாவை மகிமைப்படுத்து.+ 10  அப்போது, உன் சேமிப்புக் கிடங்குகள் நிறைந்திருக்கும்.+உன் ஆலைகள் புதிய திராட்சமதுவால் நிரம்பி வழியும். 11  என் மகனே, யெகோவாவின் புத்திமதியை ஒதுக்கித்தள்ளாதே.+அவர் கண்டிக்கும்போது வெறுப்பைக் காட்டாதே.+ 12  ஏனென்றால், அப்பா தன் செல்ல மகனைக் கண்டிப்பது போல,+யெகோவாவும் தான் நேசிக்கிறவர்களைக் கண்டிக்கிறார்.+ 13  ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும்,பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன்.+ 14  ஞானத்தைச் சம்பாதிப்பது வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட மேலானது.அது தரும் லாபம் தங்கத்தைவிட மேலானது.+ 15  அது பவளங்களைவிட* அதிக மதிப்புள்ளது.நீ ஆசைப்படுகிற எதுவுமே அதற்கு ஈடாகாது. 16  அதன் வலது கையில் நீண்ட ஆயுள் இருக்கிறது.அதன் இடது கையில் செல்வமும் மகிமையும் இருக்கின்றன. 17  அதன் வழிகள் சந்தோஷத்தைத் தரும்.அதன் பாதைகளெல்லாம் சமாதானத்தைத் தரும்.+ 18  அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது வாழ்வளிக்கிற மரம் போன்றது.அதை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ 19  யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+ தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+ 20  தன்னுடைய அறிவால் ஆழமான தண்ணீரைப் பிளந்தார்,வானத்து மேகங்களைப் பனி பொழிய வைத்தார்.+ 21  என் மகனே, இவற்றை* எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள். ஞானத்தையும்* யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள். 22  அவை உனக்கு வாழ்வு தரும்.உன் கழுத்துக்கு அலங்காரமாக இருக்கும். 23  அப்போது, நீ உன் பாதையில் பாதுகாப்பாக நடப்பாய்.உன் கால் ஒருபோதும் தடுமாறாது.*+ 24  நீ பயம் இல்லாமல் படுத்துக்கொள்வாய்.+உன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குவாய்.+ 25  திடீரென வரும் ஆபத்தை நினைத்துப் பயப்பட மாட்டாய்.+பொல்லாதவர்களைத் தாக்கும் புயலைப் பார்த்து நடுங்க மாட்டாய்.+ 26  ஏனென்றால், யெகோவா உன் நம்பிக்கையாக* இருப்பார்.+உன் கால்கள் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றுவார்.+ 27  நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+ 28  ஒருவன் கேட்பதை உன்னால் உடனே கொடுக்க முடிந்தும், “நீ போய்விட்டு வா, நாளைக்குத் தருகிறேன்” என்று சொல்லாதே. 29  உன்னை நம்பி பயமில்லாமல் வாழ்கிறஉன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எதிராகச் சதி செய்யாதே.+ 30  ஒருவன் உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாதபோது,காரணமே இல்லாமல் அவனோடு சண்டை போடாதே.+ 31  வன்முறையில் இறங்குகிறவனைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+அவன் செய்கிற எதையும் நீ செய்யாதே. 32  ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+ 33  பொல்லாதவனின் வீட்டை யெகோவா சபிக்கிறார்.+ஆனால், நீதிமானின் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.+ 34  கேலி செய்கிறவர்களை அவர் கேலி செய்கிறார்.+ஆனால், தாழ்மையானவர்களுக்கு* கருணை காட்டுகிறார்.+ 35  ஞானமுள்ளவர்கள் மரியாதையைச் சம்பாதிப்பார்கள்.ஆனால், முட்டாள்கள் அவமரியாதையைத் தேடிக்கொள்கிறார்கள்.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சட்டத்தை.”
வே.வா., “சொந்த புத்திமேல் சாயாதே.”
வே.வா., “உன் வருமானத்தில் கிடைக்கிற மிகச் சிறந்தவற்றையும்.”
அதாவது, “நடைமுறை ஞானத்தையும்.”
அநேகமாக, முந்தின வசனங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் குணங்களைக் குறிக்கலாம்.
வே.வா., “எதன்மேலும் மோதாது.”
வே.வா., “நம்பிக்கையின் ஊற்றாக.”
வே.வா., “கடமைப்பட்டவர்களுக்கு.”
வே.வா., “சாந்தமானவர்களுக்கு.”
வே.வா., “அவமரியாதையைப் பெருமையாக நினைக்கிறார்கள்.”