நீதிமொழிகள் 30:1-33

  • வறுமையும் வேண்டாம், அதிக செல்வமும் வேண்டாம் (8)

  • ஒருபோதும் திருப்தி அடையாதவை (15, 16)

  • அடையாளத்தை விட்டுச் செல்லாதவை (18, 19)

  • கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண் (20)

  • இயல்பாகவே ஞானமுள்ள உயிரினங்கள் (24)

30  யாக்கே என்பவரின் மகன் ஆகூர், இத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன முக்கியமான விஷயங்கள்.   மற்ற யாரையும்விட நான்தான் எதுவும் தெரியாதவனாக இருக்கிறேன்.+மனிதர்களுக்கு இருக்க வேண்டிய புத்தி* எனக்கு இல்லை.   நான் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.மகா பரிசுத்தமானவரைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.   வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+ காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்? தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+ பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+ அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?   கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் புடமிடப்பட்டது.+ அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு கேடயம்.+   அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் சேர்க்காதே.+அப்படிச் சேர்த்தால் அவர் உன்னைக் கண்டிப்பார்.நீ ஒரு பொய்யன் என்பது நிரூபணமாகும்.   கடவுளே, நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் எனக்காக இரண்டு காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.   பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+ எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல், தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+   ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், “யார் அந்த யெகோவா?” என்று நான் கேட்டுவிடக் கூடாது.+ அதேபோல், வறுமையால் திருடனாக மாறி, உங்களுடைய பெயரைக் களங்கப்படுத்திவிடக் கூடாது. 10  வேலைக்காரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எஜமானிடம் சொல்லாதே.அப்படிச் சொன்னால், அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாக ஆகிவிடுவாய்.+ 11  அப்பாவைச் சபிக்கிற தலைமுறையும்அம்மாவைப் பாராட்டாத தலைமுறையும் உண்டு.+ 12  அசுத்தமானவர்களாக இருந்தாலும்கூடசுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிற தலைமுறையும் உண்டு.+ 13  கண்களில் அளவுக்கு மீறிய ஆணவமும்+பார்வையில் அளவுக்கு மீறிய அகம்பாவமும் உள்ள தலைமுறையும் உண்டு. 14  வாள் போன்ற பற்களையும்வெட்டுக்கத்தி போன்ற தாடைகளையும் கொண்ட தலைமுறையும் உண்டு.அது உலகத்திலுள்ள ஏழை எளியவர்களை விழுங்குகிறது.+ 15  “கொடு! கொடு!” என்று கத்துகிற இரண்டு மகள்கள் அட்டைப்பூச்சிகளுக்கு உண்டு. திருப்தியே அடையாத மூன்று காரியங்கள் உண்டு.“போதும்!” என்று ஒருபோதும் சொல்லாத நான்கு காரியங்கள் உண்டு. 16  அவை: கல்லறை,+ மலடியின் கர்ப்பப்பை,தண்ணீர் இல்லாத நிலம்,“போதும்!” என்று சொல்லாத நெருப்பு. 17  ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+ 18  என்னுடைய அறிவுக்கு எட்டாத* மூன்று விஷயங்கள் இருக்கின்றன.எனக்குப் புரியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன. 19  அவை: வானத்தில் பறக்கிற கழுகின் வழி,பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பின் வழி,கடலில் மிதந்துசெல்கிற கப்பலின் வழி,இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி. 20  கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்: அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+ 21  இந்தப் பூமியையே அதிர வைக்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன.இந்தப் பூமியால் தாங்க முடியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன. 22  அவை: ஓர் அடிமை அரசனாக ஆட்சி செய்வது,+ஒரு முட்டாள் வயிறுமுட்ட சாப்பிடுவது, 23  வெறுக்கப்பட்ட* பெண் ஒருவனுக்கு மனைவியாவது,எஜமானியின் இடத்தை வேலைக்காரி பிடித்துக்கொள்வது.+ 24  இந்தப் பூமியிலுள்ள மிகச் சிறிய உயிரினங்களில் நான்கு உண்டு.ஆனால், அவை இயல்பாகவே* ஞானமுள்ளவை.+ 25  அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+ 26  பலம் இல்லாத ஜீவன்களாக இருந்தும்பாறைகளில் பொந்துகளை அமைக்கிற கற்பாறை முயல்கள்.*+ 27  அரசன் இல்லாமலேயே,அணி அணியாக முன்னேறிப் போகிற வெட்டுக்கிளிகள்.+ 28  கால்களால் சுவரைப் பற்றிக்கொண்டு,ராஜாவின் அரண்மனைக்குள் போகிற வீட்டுப் பல்லி.+ 29  கம்பீரமாய் நடக்கிற மூன்று உண்டு.வீறுநடை போடுகிற நான்கு உண்டு. 30  அவை: விலங்குகளிலேயே மகா பலம்படைத்ததும்,யாரைக் கண்டும் பயந்து ஓடாததுமான சிங்கம்;+ 31  வேட்டை நாய்; வெள்ளாட்டுக் கடா;ராஜாவின் தலைமையில் போகும் படை. 32  உன்னை நீயே முட்டாள்தனமாக உயர்த்தியிருந்தால்,+அல்லது அப்படிச் செய்யத் திட்டம் போட்டிருந்தால்,உன் கையால் வாயை மூடிக்கொள்.+ 33  பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவது போலவும்,மூக்கைப் பிசைந்தால் இரத்தம் வருவது போலவும்,கோபத்தைக் கிளறினால் சண்டைகள் வரும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “நான் பார்த்து அதிசயப்படுகிற.”
வே.வா., “நேசிக்கப்படாத.”
வே.வா., “மிக மிக.”
இவை கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்கள்.