பிரசங்கி 2:1-26

  • சாலொமோன் தான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கிறார் (1-11)

  • மனுஷ ஞானத்தின் பிரயோஜனம் (12-16)

  • கடின உழைப்பு வீண் (17-23)

  • சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக வேலை செய் (24-26)

2  “வா, சந்தோஷமாகப் பொழுது போக்கலாம், அதனால் என்ன பயன் கிடைக்கிறதென்று பார்க்கலாம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், அதுவும் வீண்தான் என்று புரிந்தது.   சிரிப்பைப் பற்றி, “அது பைத்தியக்காரத்தனம்!” என்று சொல்லிக்கொண்டேன். சந்தோஷமாகப் பொழுது போக்குவதைப் பற்றி, “அதனால் என்ன பிரயோஜனம்?” என்று சொல்லிக்கொண்டேன்.  திராட்சமது குடிப்பதில் என்ன பயன் என்று தெரிந்துகொள்ள நினைத்து, அதைக் குடித்துக் குடித்துப் பார்த்தேன்.+ அதேசமயத்தில், என் ஞானம் மழுங்கிவிடாதபடியும் பார்த்துக்கொண்டேன். இந்தப் பூமியில் வாழ்கிற கொஞ்சக் காலத்தில் மனுஷர்கள் என்ன செய்வது சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, புத்தியில்லாத காரியங்களையும்கூட செய்து பார்த்தேன்.  நான் பெரிய பெரிய காரியங்களைச் செய்தேன்.+ எனக்காக மாளிகைகளைக் கட்டினேன்.+ எனக்காகத் திராட்சைத் தோட்டங்களைப் போட்டேன்.+  எனக்காகத் தோட்டங்களையும் பூங்காக்களையும் அமைத்தேன். எல்லா விதமான பழ மரங்களையும் அவற்றில் நட்டு வைத்தேன்.  தோப்பில்* வளர்ந்துவந்த மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச குளங்களை வெட்டினேன்.  நிறைய வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் வைத்துக்கொண்டேன்.+ அவர்களில் சிலர் என் வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இதுவரை எருசலேமில் யாரிடமும் இல்லாத அளவுக்கு ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தேன்.+  எனக்காக வெள்ளியையும் தங்கத்தையும் குவித்து வைத்தேன்.+ ராஜாக்களின் பொக்கிஷங்களையும் மாகாணங்களின் பொக்கிஷங்களையும் குவித்து வைத்தேன்.+ எனக்காக நிறைய பாடகர்களையும் பாடகிகளையும் வைத்துக்கொண்டேன். ஆண்களுக்கு மிகவும் சந்தோஷம் தருகிற பெண் சகவாசத்தையும் வைத்துக்கொண்டேன். அதுவும், நிறைய பெண்களோடு சகவாசம் வைத்துக்கொண்டேன்.  எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன். 10  ஆசைப்பட்ட எதையுமே நான் விட்டுவைக்கவில்லை,+ சந்தோஷம் தரும் எதையுமே நான் அனுபவிக்காமல் இருக்கவில்லை. நான் கடினமாக உழைத்ததால் என் இதயத்துக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்.+ 11  ஆனால், என் கைகளால் செய்த எல்லா வேலைகளையும், அவற்றைச் செய்து முடிக்க நான் உழைத்த உழைப்பையும்+ யோசித்துப் பார்த்தபோது, அவை எல்லாமே வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்+ என்பதைப் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே பிரயோஜனமான எதுவுமே சூரியனுக்குக் கீழே இல்லை.+ 12  பிறகு, நான் ஞானமும் பைத்தியக்காரத்தனமும் முட்டாள்தனமுமான செயல்கள் எவை என்று யோசித்துப் பார்த்தேன்.+ (ராஜாவுக்குப் பின்பு வருகிறவனால் என்ன செய்ய முடியும்? ஏற்கெனவே செய்யப்பட்டதைத்தானே செய்ய முடியும்!) 13  இருட்டைவிட வெளிச்சம் எப்படிப் பிரயோஜனமானதோ அப்படியே முட்டாள்தனத்தைவிட ஞானம் பிரயோஜனமானது+ என்று புரிந்துகொண்டேன். 14  ஞானமுள்ளவன் தெளிவாகப் பார்த்து நடக்கிறான்.+ முட்டாளோ இருட்டில் நடக்கிறான்.+ கடைசியில் அவர்கள் எல்லாருக்கும் ஒரே முடிவுதான் என்பதையும் புரிந்துகொண்டேன்.+ 15  அதனால், “முட்டாளுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும்”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அப்படியானால், நான் இவ்வளவு பெரிய ஞானியாகி என்ன லாபம்? “இதுவும் வீண்தான்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 16  ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+ 17  அதனால், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாமே எனக்கு வேதனையைத்தான் தந்தது. அவை எல்லாமே வீண்தான்,+ காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.+ 18  சூரியனுக்குக் கீழே எதையெல்லாம் பாடுபட்டுச் சேர்த்தேனோ அதையெல்லாம் வெறுத்தேன்,+ ஏனென்றால் எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ 19  அவன் ஞானமுள்ளவனாக இருப்பானா முட்டாளாக இருப்பானா என்று யாருக்குத் தெரியும்?+ எப்படியிருந்தாலும், சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தோடு பாடுபட்டுச் சம்பாதித்த எல்லாவற்றையும் அவன்தான் ஆண்டு அனுபவிப்பான். இதுவும் வீண்தான். 20  அதனால், சூரியனுக்குக் கீழே நான் கஷ்டப்பட்டுச் செய்த வேலைகளையெல்லாம் நினைத்துத் தவிக்க ஆரம்பித்தேன். 21  ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான். 22  ஒருவன் சூரியனுக்குக் கீழே பாடுபட்டு வேலை செய்வதாலும், அப்படி வேலை செய்ய அவனைத் தூண்டுகிற லட்சிய வெறியினாலும் என்ன லாபம்?+ 23  அவனுடைய வேலையினால் வாழ்நாளெல்லாம் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.+ ராத்திரியில்கூட அவனுடைய இதயத்தில் அமைதியில்லை.+ இதுவும் வீண்தான். 24  சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.+ இதுவும் உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.+ 25  என்னைவிட நன்றாகச் சாப்பிடுகிறவனும் குடிக்கிறவனும் யார்?+ 26  உண்மைக் கடவுள் தனக்குப் பிரியமாக நடக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் சந்தோஷத்தையும் தருகிறார்.+ ஆனால், அவனுக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து வைக்கிற வேலையைப் பாவிக்குக் கொடுக்கிறார்.+ இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “காட்டில்.”