யோசுவா 23:1-16

  • இஸ்ரவேல் தலைவர்களிடம் யோசுவா சொல்லும் கடைசி வார்த்தைகள் (1-16)

    • யெகோவாவின் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை (14)

23  சுற்றியிருந்த எல்லா எதிரிகளிடமிருந்தும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அமைதி தந்து+ ரொம்பக் காலம் ஆகியிருந்தது. யோசுவாவுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது.+  அப்போது, எல்லா இஸ்ரவேலர்களையும் அவர்களுடைய பெரியோர்களையும்* தலைவர்களையும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும்+ அவர் கூப்பிட்டு,+ “எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது.  உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காக இந்தத் தேசங்கள் எல்லாவற்றையும் தோற்கடித்ததை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்களுக்காகப் போர் செய்தார்.+  இதோ, நான் யோர்தானிலிருந்து மேற்கே பெருங்கடல்வரை* இருக்கிற எல்லா தேசத்தாரையும் உங்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தேன்.+ அவர்களுடைய தேசத்தைக் குலுக்கல் முறையில் உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்திருக்கிறேன்.+ அவர்களில் கொஞ்சம் பேர் இன்னும் இருந்தாலும் இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமானதுதான்.+  உங்கள் கடவுளாகிய யெகோவாதான் அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்,+ உங்களுக்காகத்தான் அவர்களைத் துரத்தியடித்தார். உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே+ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டீர்கள்.  மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் ரொம்பத் தைரியத்தோடு கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப்போகக் கூடாது.+  உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற இந்தத் தேசத்தாரோடு சேரவே கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை உங்கள் வாயால்கூட உச்சரிக்கக் கூடாது,+ அந்தப் பெயர்களில் சத்தியம் பண்ணவும் கூடாது. அந்தத் தெய்வங்களை நீங்கள் கும்பிடவோ அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ கூடாது.+  இன்றுவரை நீங்கள் செய்ததுபோல் இனிமேலும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு உண்மையாக* இருக்க வேண்டும்.+  பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை உங்கள் முன்னாலிருந்து யெகோவா துரத்திவிடுவார்.+ இன்றுவரை எந்த மனுஷனால் உங்களை எதிர்த்து நிற்க முடிந்திருக்கிறது?+ 10  உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காகப் போர் செய்வார்.+ அப்போது, உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தியடிப்பான்.+ 11  அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பை+ ஒருநாளும் விட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 12  நீங்கள் அவரைவிட்டு விலகி, உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற தேசத்தாருடன்+ சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்,*+ நீங்களும் அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பழகினால், 13  உங்கள் கடவுளாகிய யெகோவா இனி அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்திவிட மாட்டார்+ என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், உங்கள் முதுகுக்குச் சாட்டையாகவும்,+ உங்கள் கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 14  எனக்குச் சாவு நெருங்கிவிட்டது. உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.* அவை எல்லாமே நிறைவேறியிருக்கின்றன, அவற்றில் ஒரு வார்த்தைகூட பொய்த்துப்போகவில்லை.+ 15  ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+ 16  உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த ஒப்பந்தத்தை மீறி மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வரும்.+ அவர் தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களையும்.”
அதாவது, “மத்தியதரைக் கடல்வரை.”
நே.மொ., “யெகோவாவைப் பற்றிக்கொண்டு.”
அதாவது, “அவர்களுக்குப் பெண் கொடுத்து, அவர்களிடமிருந்து பெண் எடுத்தால்.”
வே.வா., “உங்கள் முழு இதயத்துக்கும் ஜீவனுக்கும் தெரியும்.”