யோபு 12:1-25

  • யோபுவின் பதில் (1-25)

    • “நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை” (3)

    • ‘என்னைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்’ (4)

    • ‘கடவுள் ஞானமுள்ளவர்’ (13)

    • நீதிபதிகளையும் ராஜாக்களையும்விட கடவுள் உயர்ந்தவர் (17, 18)

12  அதற்கு யோபு,   “நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் ஆயிற்றே!உங்களுக்குப் பிறகு ஞானிகள் என்று சொல்லிக்கொள்ள யார் இருக்கப்போகிறார்கள்?   ஆனால், நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை. எனக்கும் புத்தி* இருக்கிறது. நீங்கள் சொல்கிற விஷயங்களெல்லாம் யாருக்குத்தான் தெரியாது?   நான் கடவுளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.+அதைப் பார்த்து என் நண்பர்கள் கேலி செய்கிறார்கள்.+ நீதிநேர்மையோடு நடப்பவனைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்.   எதற்கும் கவலைப்படாத ஆட்கள் தங்களுக்கு அழிவே வராது என்று நினைக்கிறார்கள்.கஷ்டத்தில் துவண்டுபோகிற ஆட்கள்தான்* அழிந்துபோவார்கள் என்று நினைக்கிறார்கள்.   கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+   ஆனால், தயவுசெய்து மிருகங்களைக் கேட்டுப் பாருங்கள்; அவை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.பறவைகளை விசாரித்துப் பாருங்கள்; அவை உங்களுக்கு விளக்கிச் சொல்லும்.   பூமியைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்;* அது உங்களுக்குச் சொல்லித்தரும்.கடல்மீனும் உங்களுக்கு எடுத்துச்சொல்லும்.   யெகோவாதானே அவற்றையெல்லாம் உண்டாக்கினார்?இந்த உண்மையை அறியாத படைப்பு எதுவுமே இல்லை. 10  அவருடைய கையில்தான் எல்லா ஜீவன்களின் உயிரும் இருக்கிறது.மனுஷனின் மூச்சும் அவரிடம்தான் இருக்கிறது.+ 11  சாப்பாட்டை நாக்கு ருசி பார்ப்பதில்லையா?அது போல, வார்த்தைகளைக் காது சோதித்துப் பார்ப்பதில்லையா?+ 12  வயதானவர்கள் ஞானம் உள்ளவர்கள்தானே?+பெரியவர்கள் அனுபவம்* உள்ளவர்கள்தானே? 13  ஆனால், கடவுள்தான் எல்லா ஞானமும் பலமும் உள்ளவர்.+ஆலோசனையும்* புரிந்துகொள்ளுதலும் உள்ளவர்.+ 14  அவர் இடித்ததை யாராலும் கட்ட முடியாது.+அவர் மூடியதை எந்த மனுஷனாலும் திறக்க முடியாது. 15  அவர் மழையைத் தடுத்தால், எல்லாமே காய்ந்துபோகும்.+அவர் மழையைத் தந்தால், வெள்ளம் பெருக்கெடுக்கும்.+ 16  அவரிடம் பலமும் ஞானமும் உண்டு.+ஏமாறுகிறவனும் ஏமாற்றுகிறவனும் அவருடைய கையில் இருக்கிறார்கள். 17  ஆலோசகர்களை அவர் வெறுங்காலில் அலைய விடுகிறார்.*நீதிபதிகளை முட்டாள்களாக்குகிறார்.+ 18  ராஜாக்களின் அதிகாரத்தைப் பறிக்கிறார்.+அவர்களை அடிமையாக்குகிறார். 19  குருமார்களை வெறுங்காலில் அலைய விடுகிறார்.+அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களை வீழ்த்துகிறார்.+ 20  நம்பகமான ஆலோசகர்களின் வாயை அடைத்துவிடுகிறார். பெரியவர்களின் புத்தியை அழித்துவிடுகிறார். 21  செல்வாக்கு உள்ளவர்களுக்கு மிகுந்த அவமானம் வரும்படி செய்கிறார்.+பலமுள்ளவர்களைப் பலவீனமாக்குகிறார். 22  இருட்டுக்குள் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகிறார்.+கும்மிருட்டுக்குள் புதைந்திருப்பவற்றை வெட்டவெளிச்சமாக்குகிறார். 23  தேசங்களை வளரவிட்டு அவற்றை அழித்துவிடுகிறார்.ஜனங்களைப் பெருக வைத்து, அவர்களை வேறு தேசத்துக்குக் கைதிகளாக அனுப்பிவிடுகிறார். 24  ஜனங்களுடைய தலைவர்களின் புத்தியை* மழுங்க வைக்கிறார்.பாதையில்லாத பொட்டல் காடுகளில் அவர்களைத் திரிய வைக்கிறார்.+ 25  அவர்களை இருட்டில் தட்டுத்தடுமாற வைக்கிறார்.+குடிகாரன் தள்ளாடுவதுபோல் அங்குமிங்கும் தள்ளாட வைக்கிறார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “அடி சறுக்கியவர்கள்தான்.”
அல்லது, “பூமியிடம் பேசிப் பாருங்கள்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “நோக்கமும்; தீர்மானமும்.”
வே.வா., “ஆலோசகர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிடுகிறார்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனை.”