யோபு 14:1-22

  • யோபுவின் பதில் தொடர்கிறது (1-22)

    • மனுஷன் வாழ்வது கொஞ்சக் காலம்தான், அதுவும் பெரிய போராட்டம்தான் (1)

    • “ஒரு மரத்துக்குக்கூட நம்பிக்கை இருக்கிறது” (7)

    • ‘நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ (13)

    • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?” (14)

    • இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர கடவுள் ஏக்கமாக இருக்கிறார் (15)

14  பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+   அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+   ஆனாலும், நீங்கள் அவனையே கண்ணெடுக்காமல் பார்க்கிறீர்கள்.உங்களோடு வாதாடுவதற்குக் கூப்பிடுகிறீர்கள்.+   பாவமுள்ளவன் பாவமில்லாதவனைப் பெற்றெடுக்க முடியுமா?+ முடியவே முடியாதே!   மனுஷனின் வாழ்நாள் காலத்துக்கு எல்லை இருக்கிறது.அது உங்கள் கையில் இருக்கிறது.நீங்கள் குறித்திருக்கிற எல்லையை மீறி அவன் வாழ முடியாது.+   அவனிடமிருந்து உங்கள் பார்வையைக் கொஞ்சம் திருப்புங்கள்.பாடுபட்டு வேலை செய்தபின் ஓய்வெடுக்கும் கூலியாளைப் போல் அவன் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே.+   ஒரு மரத்துக்குக்கூட நம்பிக்கை இருக்கிறது. வெட்டிச் சாய்க்கப்பட்டாலும், அது திரும்பவும் துளிர்க்கும்.மறுபடியும் கிளைகள் விடும்.   ஒருவேளை அதன் வேர்கள் பல காலமாக மண்ணுக்குள் கிடக்கலாம்.அதன் அடிமரம் காய்ந்துபோகலாம்.   ஆனாலும், தண்ணீர் பட்டதும் அது துளிர்விடுகிறது.புதிதாக முளைக்கிற செடிபோல் கிளைகள் விடுகிறது. 10  மனுஷனோ, செத்தபின் ஒரேயடியாக அழிந்துபோகிறான்.எங்குமே இல்லாமல் போய்விடுகிறான்.+ 11  கடல் காய்ந்துபோகிறது.நதி வற்றிப்போகிறது. 12  அதுபோலவே, மனுஷன் கண் மூடிவிட்டால் எழுந்திருப்பதில்லை.+ வானம் ஒழிந்துபோகும்வரை அவன் கண்திறக்கப் போவதில்லை.அவனை யாரும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் போவதில்லை.+ 13  கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து,+உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து,நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+ 14  மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?+ நான் அடிமைப்பட்டிருக்கும்* காலமெல்லாம் காத்திருப்பேன்.அதன்பின் அங்கிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.+ 15  நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன்.+ உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள். 16  ஆனால், இப்போது நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் எண்ணுகிறீர்கள்.என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள். 17  என் பாவத்தை மூட்டையில் கட்டி வைத்திருக்கிறீர்கள்.அதைப் பசைபோட்டு ஒட்டி வைத்திருக்கிறீர்கள். 18  மலை விழுந்து நொறுங்குவது போலவும்,பாறை இடம் பெயர்வது போலவும், 19  தண்ணீர் கற்களைத் தேயச் செய்வது போலவும்,வெள்ளம் மண்ணை அரித்துவிடுவது போலவும்,அற்ப மனுஷனின் நம்பிக்கையை நீங்கள் அழித்துவிட்டீர்கள். 20  உயிர் போகும்வரை அவனை ஆட்டிப்படைக்கிறீர்கள்.+அவன் உருவத்தையே மாற்றி மண்ணுக்குள் அனுப்புகிறீர்கள். 21  அதன்பின் அவனுடைய மகன்கள் கௌரவமாக வாழ்ந்தாலும் அவனுக்குத் தெரிவதில்லை.அவர்கள் கேவலமாக வாழ்ந்தாலும் தெரிவதில்லை.+ 22  உயிரோடு இருக்கும்வரைதான் அவன் வலியில் துடிக்கிறான்.மூச்சு இருக்கும்வரைதான் அழுது புலம்புகிறான்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவன் வாழ்க்கையே வேதனைகள் நிறைந்ததுதான்.”
அல்லது, “கிள்ளி எறியப்படுகிறான்.”
அதாவது, “கல்லறையில் இருக்கும்.”