யோபு 35:1-16

  • யோபு தன்னை நியாயப்படுத்தி தவறாகப் பேசுவதை எலிகூ எடுத்துச் சொல்கிறார் (1-16)

    • கடவுளைவிட தான் நல்லவன் என்று யோபு சொல்கிறார் (2)

    • கடவுள் உயரத்தில் இருக்கிறார், மனிதர்கள் பாவம் செய்வதால் அவருக்குப் பாதிப்பு இல்லை (5, 6)

    • கடவுளுக்காக யோபு காத்திருக்க வேண்டும் (14)

35  பின்பு எலிகூ,   “‘கடவுளைவிட நான் நீதியுள்ளவன்’ என்று சொல்கிறீர்களே,உங்கள்மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?+   ‘நான் நீதிமானாக இருந்து என்ன பிரயோஜனம்?* பாவம் செய்யாததால் அப்படி என்ன பலன் கிடைத்துவிட்டது?’+ என்று கேட்கிறீர்களே.   நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன்.உங்களோடு இருக்கிறவர்களுக்கும்+ சேர்த்து பதில் சொல்கிறேன்.   வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள்.அவ்வளவு உயரத்தில் இருக்கிற மேகங்களைக் கவனித்துப் பாருங்கள்.+   நீங்கள் பாவம் செய்வதால் கடவுளுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?+ அக்கிரமங்கள் செய்வதால் அவருக்கு என்ன ஆகப்போகிறது?+   நீங்கள் நீதிமானாக இருப்பதால் அவருக்கு என்ன லாபம்?நேர்மையாக இருப்பதால் அவருக்கு என்ன பிரயோஜனம்?+   நீங்கள் அக்கிரமம் செய்வதால் பாதிக்கப்படுவது உங்களைப் போன்ற மனுஷர்கள்தான்.உங்கள் நீதியினால் நன்மை அடைவதும் மனுஷர்கள்தான்.   கொடுமை தாங்க முடியாமல் ஜனங்கள் கதறி அழுகிறார்கள்.அடக்கி ஒடுக்குகிறவர்களின் கையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்கள்.+ 10  ஆனால் யாருமே, ‘என்னுடைய மகத்தான படைப்பாளராகிய கடவுள் எங்கே?+ராத்திரியில் நான் புகழ் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமானவர் எங்கே?’+ என்று கேட்பதில்லை. 11  மிருகங்களைவிட+ நமக்கு அதிகமான அறிவைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.+பறவைகளைவிட நமக்கு அதிகமான புத்தியைக் கொடுத்திருக்கிறார். 12  ஆனால், கெட்ட ஜனங்கள் பெருமைபிடித்து அலைகிறார்கள்.+அதனால்தான், அவர்கள் உதவிக்காகக் கெஞ்சினாலும் கடவுள் கேட்பதில்லை.+ 13  அவரிடம் நாம் போலித்தனமாகக் கெஞ்சினால் அவர் கேட்பாரா?+சர்வவல்லமையுள்ளவர் கண்டிப்பாக அதைக் காதில் வாங்க மாட்டார். 14  அப்படியிருக்கும்போது, அவர் உங்களைக் கண்டுகொள்வதில்லை என்று புலம்பினால்+ அவர் கேட்பாரா? அவர்தான் உங்களுக்குத் தீர்ப்பு சொல்லப்போகிறார்; அதுவரை பொறுமையோடு காத்திருங்கள்.+ 15  நீங்கள் அவசரப்பட்டுப் பேசியதை அவர் பெரிதுபடுத்தவில்லை.கோபத்தோடு உங்களைத் தண்டிக்கவும் இல்லை.+ 16  யோபுவே, நீங்கள் தேவையில்லாமல் நிறைய பேசிவிட்டீர்கள்.அறிவில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்கள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, “கடவுளுக்கு என்ன பிரயோஜனம்?”