தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம் 1:1-10

  • வாழ்த்துக்கள் (1)

  • தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்துக்காக நன்றி (2-10)

1  பரலோகத் தகப்பனாகிய கடவுளோடும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றுபட்டிருக்கிற தெசலோனிக்கேயருடைய சபைக்கு, சில்வானுவோடும்*+ தீமோத்தேயுவோடும்+ சேர்ந்து பவுல் எழுதுவது: கடவுளிடமிருந்து அளவற்ற கருணையும் சமாதானமும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.  உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்+ கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்.  விசுவாசத்தால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் வைத்திருக்கிற நம்பிக்கையின்+ காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நம்முடைய தகப்பனாகிய கடவுளுக்கு முன்னால் எப்போதும் நினைத்துக்கொள்கிறோம்.  கடவுளுடைய அன்பைப் பெற்ற சகோதரர்களே, நீங்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.  ஏனென்றால், நல்ல செய்தியை உங்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே பிரசங்கிக்காமல், வல்லமையோடும் கடவுளுடைய சக்தியோடும் முழு நிச்சயத்தோடும் பிரசங்கித்தோம். உங்களுடைய நலனை மனதில் வைத்து நாங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டோம் என்பது உங்களுக்கே தெரியும்.  உங்களுக்குப் பயங்கர உபத்திரவம் வந்தபோதிலும்,+ கடவுளுடைய சக்தியால் கிடைக்கிற சந்தோஷத்தோடு அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்; எங்களைப் போலவும்+ நம் எஜமானைப் போலவும்+ நடந்துகொண்டீர்கள்.  இப்படி, மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற விசுவாசிகள்* எல்லாருக்கும் முன்மாதிரிகளாக ஆனீர்கள்.  உண்மையில், மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற மக்களுக்கு யெகோவாவின்* செய்தி உங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடவுள்மேல் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்ற செய்தி எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.+ அதனால், நாங்கள் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை.  நாங்கள் முதன்முதலில் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட விதத்தையும், சிலைகளை விட்டுவிட்டு+ உயிருள்ள உண்மைக் கடவுளுக்கு ஊழியம் செய்ய அவரிடம் திரும்பிய விதத்தையும் அவர்களே மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறார்கள். 10  அதோடு, கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரும் வரப்போகிற கடும் கோபத்திலிருந்து+ நம்மைக் காப்பாற்றுகிறவருமான அவருடைய மகன் இயேசு பரலோகத்திலிருந்து வெளிப்படுவதற்காக+ நீங்கள் காத்துக்கொண்டிருப்பதையும் சொல்லி வருகிறார்கள்.

அடிக்குறிப்புகள்

சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “இயேசுவின் சீஷர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.