பேதுருவின் முதலாம் கடிதம் 1:1-25

  • வாழ்த்துக்கள் (1, 2)

  • அசைக்க முடியாத நம்பிக்கை கிடைப்பதற்காகப் புதிய பிறப்பைக் கொடுத்தார் (3-12)

  • கீழ்ப்படிகிற பிள்ளைகளாக, பரிசுத்தமாக நடந்துகொள்ளுங்கள் (13-25)

1  பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா,+ ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களுக்குச் சிதறிப்போய்த் தற்காலிகக் குடிமக்களாக வாழ்கிற உங்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு+ எழுதுவது: கடவுளுடைய அளவற்ற கருணையும் சமாதானமும் உங்களுக்கு அதிகமதிகமாகக் கிடைக்கட்டும்.  நீங்கள் பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டவர்களாகவும்+ இருப்பதற்காக, கடவுளுடைய முன்னறிவின்படி+ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய சக்தியால் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.+  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருப்பவருக்குப் புகழ் சேரட்டும். அவர் இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலம்+ தன்னுடைய மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பைக் கொடுத்தார்.+ இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையும்,+  அழியாத, களங்கமில்லாத, மறையாத ஆஸ்தியும்,+ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஆஸ்தி உங்களுக்காகவும் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.+  விசுவாசத்தின் மூலம் கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் மீட்புக்கென்று கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிற உங்களுக்காகவும் அந்த ஆஸ்தி பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.  இதனால் நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனாலும், கொஞ்சக் காலம் பலவிதமான சோதனைகளால் நீங்கள் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.+  இப்படிச் சோதனைகளால் சோதிக்கப்பட்ட* உங்கள் விசுவாசம்+ தங்கத்தைவிட மதிப்புள்ளது. ஏனென்றால், நெருப்பில் சோதிக்கப்படுகிற தங்கம்கூட அழிந்துபோகும். உங்கள் விசுவாசமோ இயேசு கிறிஸ்து வெளிப்படும் சமயத்தில் உங்களுக்குப் புகழையும் மகிமையையும் மதிப்பையும் சேர்க்கும்.+  நீங்கள் அவரைப் பார்த்ததே இல்லையென்றாலும், அவர்மேல் அன்பு காட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், அவர்மேல் விசுவாசம் வைக்கிறீர்கள்; அதோடு, சொல்ல முடியாத சந்தோஷத்தையும் அளவில்லாத மகிழ்ச்சியையும் அடைகிறீர்கள்.  ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தின் பலனாக உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறீர்கள்.+ 10  உங்களுக்குக் கிடைக்கவிருந்த அளவற்ற கருணையைப் பற்றி முன்கூட்டியே சொன்ன தீர்க்கதரிசிகள், இந்த மீட்பைப் பற்றித்தான் ஊக்கமாகவும் கவனமாகவும் அலசி ஆராய்ந்தார்கள்.+ 11  கிறிஸ்து அனுபவிக்க வேண்டியிருந்த பாடுகளையும்+ அவற்றுக்குப் பின்பு வரவிருந்த மகிமையையும் பற்றி அவர்களிடமிருந்த கடவுளுடைய சக்தி முன்கூட்டியே சொன்னபோது, எந்தக் காலத்தை அல்லது எந்த வேளையை அது சுட்டிக்காட்டுகிறது என்பதை அவர்கள் ஆராய்ந்துகொண்டே இருந்தார்கள்.+ 12  அவர்கள் சேவை செய்துவந்தது தங்களுக்காக அல்ல, உங்களுக்காகத்தான் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்கூட்டியே சொன்ன விஷயங்கள், பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் நல்ல செய்தியைப் பிரசங்கித்தவர்களின் மூலம் இப்போது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.+ அந்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதற்குத் தேவதூதர்களும் ஆவலோடு இருக்கிறார்கள். 13  அதனால், மும்முரமாகச் செயல்படுவதற்கு உங்கள் மனதைத் தயார்படுத்துங்கள்,*+ எப்போதும் தெளிந்த புத்தியோடு இருங்கள்.+ இயேசு கிறிஸ்து வெளிப்படும் சமயத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படுகிற அளவற்ற கருணையின் மேல் நம்பிக்கை வையுங்கள். 14  கடவுளைப் பற்றித் தெரியாத காலத்தில் உங்களுக்கு இருந்த ஆசைகளின்படி நடப்பதை விட்டுவிட்டு, கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். 15  உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.+ 16  “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+ 17  பாரபட்சம் இல்லாமல்+ அவரவருடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு கொடுக்கிற தகப்பனிடம் நீங்கள் ஜெபம் செய்வதால், தற்காலிகக் குடிமக்களாக வாழும் காலமெல்லாம் பயபக்தியோடு நடந்துகொள்ளுங்கள்.+ 18  ஏனென்றால், உங்கள் முன்னோர்களிடமிருந்து* வந்த வீணான வாழ்க்கை முறையிலிருந்து, அழியக்கூடிய பொருள்களான தங்கம், வெள்ளி போன்றவற்றால் நீங்கள் விடுவிக்கப்படாமல்,+ 19  மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய+ கிறிஸ்துவின்+ விலைமதிப்புள்ள இரத்தத்தால்+ விடுவிக்கப்பட்டு* இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும். 20  உண்மைதான், உலகம் உண்டாவதற்கு முன்பே கடவுளால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்,+ ஆனால் இந்தக் கடைசிக் காலங்களில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.+ 21  அவர் மூலம்தான் நீங்கள் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.+ அப்படி நீங்கள் கடவுள்மேல் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பதற்காகத்தான் கடவுள் அவரை உயிரோடு எழுப்பி+ மகிமைப்படுத்தினார்.+ 22  நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக் காட்டுகிறீர்கள்;+ அதனால் இப்போது, இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.+ 23  ஏனென்றால், அழியக்கூடிய விதையால் அல்ல,+ அழியாத விதையால்,* என்றென்றும் இருக்கிற உயிருள்ள கடவுளுடைய வார்த்தையின் மூலம்+ நீங்கள் புதிய பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.+ 24  வேதவசனம் சொல்கிறபடி, “மனுஷர்கள் எல்லாரும் புல்லைப் போல் இருக்கிறார்கள், அவர்களுடைய மகிமையெல்லாம் புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது; புல் உலர்ந்துபோகும், அதன் பூவும் உதிர்ந்துபோகும். 25  ஆனால், யெகோவாவின்* வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.”+ இந்த ‘வார்த்தைதான்’ உங்களுக்கு நல்ல செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “புடமிடப்பட்ட.”
நே.மொ., “உங்கள் மனதின் கச்சையைக் கட்டிக்கொள்ளுங்கள்.”
வே.வா., “பாரம்பரியத்தால்.”
நே.மொ., “மீட்கப்பட்டு.”
அதாவது, “கனி தரக்கூடிய விதையால்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.