கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 4:1-18

  • நல்ல செய்தியின் ஒளி (1-6)

    • விசுவாசிகளாக இல்லாதவர்களின் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றன (4)

  • மண்பாத்திரங்களில் பொக்கிஷம் (7-18)

4  அதனால்தான், இந்த ஊழியத்தைக் கடவுளுடைய இரக்கத்தால் பெற்றிருக்கிற நாங்கள் சோர்ந்துபோவதில்லை.  மறைவாகச் செய்யப்படுகிற வெட்கக்கேடான காரியங்களை ஒதுக்கித்தள்ளியிருக்கிறோம். தந்திரமாக நடக்காமலும் கடவுளுடைய வார்த்தையைக் கலப்படம் செய்யாமலும் சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறோம்.+ அதனால், கடவுளுக்கு முன்னால் எல்லா மனிதர்களுக்கும்* முன்மாதிரிகளாக இருக்கிறோம்.+  நாங்கள் சொல்கிற நல்ல செய்தி திரையால் மறைக்கப்பட்டிருந்தால், அழிவின் பாதையில் போகிறவர்களுக்குத்தான் அது மறைக்கப்பட்டிருக்கும்.  விசுவாசிகளாக* இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின்* கடவுள்+ குருடாக்கியிருக்கிறான்.+ அதனால், கடவுளுடைய சாயலில்+ இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான நல்ல செய்தியின் ஒளியை அவர்களால் பார்க்க முடிவதில்லை.+  நாங்கள் எங்களைப் பற்றியே பிரசங்கிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவே எஜமான் என்றும், இயேசுவுக்காக நாங்கள் உங்களுடைய அடிமைகள் என்றும்தான் பிரசங்கிக்கிறோம்.  “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”+ என்று சொன்ன கடவுள்தான் கிறிஸ்துவின் மூலம்* தன்னைப் பற்றிய அருமையான அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.+  இருந்தாலும், இயல்புக்கு மிஞ்சிய சக்தி எங்களுடையது அல்ல, அது கடவுளுடையது என்பது தெளிவாய்த் தெரிவதற்காக,+ நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை+ மண்பாத்திரங்களில்*+ பெற்றிருக்கிறோம்.  நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+  கொடுமைப்படுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை.+ தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.+ 10  இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, இயேசு அனுபவித்த மரண அவஸ்தைகளை எங்கள் உடலில் சகித்து வருகிறோம்.+ 11  இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவுக்காக எப்போதும் மரணத்தை எதிர்ப்படுகிறோம்.+ 12  இதனால், எங்களுக்கு மரணம் வருகிறது, உங்களுக்கோ வாழ்வு கிடைக்கிறது. 13  “நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்ற விசுவாசம் எங்களுக்கு இருப்பதால் நாங்களும் விசுவாசம் வைக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14  இயேசுவை உயிரோடு எழுப்பியவர் இயேசுவைப் போலவே எங்களையும் உயிரோடு எழுப்பி,+ உங்களோடுகூட அவருக்கு முன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15  உங்களில் பலர் கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும், அதன் மூலம் அவருடைய அளவற்ற கருணையை நீங்கள் மேலும் மேலும் பெற்று அவருக்கு மகிமை சேர்ப்பதற்காகவும் இவையெல்லாம் உங்களுக்காகவே நடக்கிறது.+ 16  அதனால், நாம் சோர்ந்துபோவதில்லை. நம் உடல் அழிந்துவந்தாலும், நம் உள்ளம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 17  நமக்கு வரும் உபத்திரவம்* லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 18  அதனால், பார்க்க முடிந்த காரியங்கள்மீது அல்ல, பார்க்க முடியாத காரியங்கள் மீதே நம்முடைய கண்களைப் பதிய வைத்திருக்கிறோம்.+ பார்க்க முடிந்த காரியங்கள் தற்காலிகமானவை, பார்க்க முடியாத காரியங்களோ என்றென்றும் நிலைத்திருப்பவை.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மனிதர்களுடைய மனசாட்சிக்கும்.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாக.”
வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “கிறிஸ்துவுடைய முகத்தின் மூலம்.”
வே.வா., “மண் ஜாடிகளில்.”
அல்லது, “நம்பிக்கை இல்லாமல் விட்டுவிடப்படுவதில்லை.”
வே.வா., “சோதனை.”