2 சாமுவேல் 1:1-27

  • சவுல் இறந்த செய்தியை தாவீது கேள்விப்படுகிறார் (1-16)

  • சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் தாவீதின் புலம்பல் பாடல் (17-27)

1  சவுல் இறந்துபோன பின்பு, தாவீது அமலேக்கியர்களைத் தோற்கடித்து* சிக்லாகுவுக்குத்+ திரும்பி வந்து, இரண்டு நாட்கள் தங்கினார்.  மூன்றாம் நாளில், சவுலுடைய படையிலிருந்து ஒருவன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டும், தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டும் தாவீதிடம் வந்து அவர் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்தான்.  தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “இஸ்ரவேல் படையிலிருந்து ஓடிவருகிறேன்” என்று சொன்னான்.  அப்போது தாவீது, “என்ன நடந்தது? தயவுசெய்து சொல்” என்று கேட்டார். அதற்கு அவன், “இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள், நிறைய பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சவுலும் அவருடைய மகன் யோனத்தானும்கூட செத்துப்போய்விட்டார்கள்”+ என்று சொன்னான்.  அதற்கு தாவீது, “சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் செத்துப்போய்விட்டார்கள் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று தன்னிடம் செய்தி சொன்ன அந்த இளைஞனிடம் கேட்டார்.  அதற்கு அவன், “நான் எதேச்சையாக கில்போவா மலைக்குப்+ போயிருந்தேன். அங்கே சவுல் அவருடைய ஈட்டிமீது சாய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்; பெலிஸ்திய ரதவீரர்களும் குதிரைவீரர்களும் அவரை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.+  அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னைக் கூப்பிட்டார்; அதற்கு நான், ‘சொல்லுங்கள், எஜமானே’ என்றேன்.  அவர் என்னிடம், ‘நீ யார்?’ என்று கேட்டார். அதற்கு, ‘நான் ஒரு அமலேக்கியன்’+ என்று சொன்னேன்.  அப்போது அவர், ‘நான் மரண வேதனையில் துடிக்கிறேன், என் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து என் பக்கத்தில் வந்து என்னைக் கொன்றுபோடு’ என்று சொன்னார். 10  அவர் படுகாயம் அடைந்திருந்தார்; அதனால் இனிமேல் பிழைக்க மாட்டார் என்று நினைத்து, அவர் பக்கத்தில் போய் அவரைக் கொன்றுபோட்டேன்.+ அவருடைய தலையிலிருந்த கிரீடத்தையும்* கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன், எஜமானே” என்று சொன்னான். 11  அதைக் கேட்டதும், தாவீது தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டார்; அவருடன் இருந்த எல்லா ஆட்களும்கூட தங்களுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். 12  சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் யெகோவாவின் மக்கள் பலரும் இஸ்ரவேலர்கள்+ பலரும் வாளுக்கு இரையானதால் அவர்கள் கதறினார்கள், புலம்பி அழுதார்கள்; சாயங்காலம்வரை ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்கள்.+ 13  பின்பு தாவீது அந்த இளைஞனிடம், “நீ யார், எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்; அதற்கு அவன், “நான் இஸ்ரவேலில் அன்னியனாகக் குடியிருக்கிற ஒரு அமலேக்கியனுடைய மகன்” என்று சொன்னான். 14  அப்போது தாவீது, “எவ்வளவு துணிச்சல் இருந்தால், யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரையே கொன்றுபோட்டிருப்பாய்?”+ என்று கேட்டார். 15  பின்பு அவர் தன்னுடைய ஆட்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டிப்போடு” என்று சொன்னார். அவன் அந்த இளைஞனை வெட்டிப்போட்டான், அவன் செத்துப்போனான்.+ 16  அப்போது தாவீது, “‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான்தான் கொன்றுபோட்டேன்’+ என்று உன் வாயாலேயே சொன்னாய்; அதனால், உன்னுடைய சாவுக்கு நீயேதான் காரணம்”* என்றார். 17  பின்பு சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் தாவீது புலம்பல் பாடலைப் பாடினார்;+ 18  யாசேர் புத்தகத்தில்,+ “வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புலம்பல் பாடலை யூதா மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்: 19  “இஸ்ரவேலே, அழகானவர்கள் உன்னுடைய மலைகளில் வீழ்ந்து கிடக்கிறார்களே!+ மாவீரர்கள் வீழ்ந்தார்களே! 20  இதை காத் நகரத்திலே சொல்லாதீர்கள்;+அஸ்கலோன் வீதிகளிலே அறிவிக்காதீர்கள்,இதைக் கேள்விப்பட்டால் பெலிஸ்தியப் பெண்கள் கொண்டாடுவார்களே!விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் மகள்கள் துள்ளிக் குதிப்பார்களே! 21  கில்போவா மலைத்தொடர்களே,+பனியோ மழையோ உங்கள்மேல் பொழியாமல் இருக்கட்டும்,பரிசுத்த காணிக்கையாகக் கொடுக்க உங்களுடைய நிலங்களில் எதுவும் விளையாமல் போகட்டும்.+ஏனென்றால், மாவீரர்களின் கேடயம் அங்கே கறைபடிந்து கிடக்கிறது,சவுலின் கேடயம் எண்ணெய் பூசப்படாமல் இருக்கிறது. 22  எதிரிகளின் இரத்தத்தைக் குடிக்காமல், வீரர்களின் கொழுப்பை எடுக்காமல்,யோனத்தானின் அம்பு திரும்பியதில்லை;+வெற்றி பெறாமல் சவுலின் வாள் வந்ததில்லை.+ 23  சவுலும் யோனத்தானும்+ அன்பானவர்கள், அருமையானவர்கள்,*சாவிலும்கூட இணைபிரியாதவர்கள்.+ கழுகைவிட வேகமானவர்கள்,+சிங்கத்தைவிட வலிமையானவர்கள்.+ 24  இஸ்ரவேல் பெண்களே, சவுலுக்காக அழுது புலம்புங்கள்;வேலைப்பாடுகள் நிறைந்த சிவப்பு ஆடைகளால் அவர் உங்களை அலங்கரித்தாரே,உங்கள் உடைகள்மீது தங்க நகைகளை அணிவித்தாரே. 25  மாவீரர்கள் போரில் வீழ்ந்தார்களே! மலையில் யோனத்தான் விழுந்து கிடக்கிறாரே!+ 26  யோனத்தானே, என் சகோதரரே, உயிருக்கு உயிரானவரே,+உங்களை நினைத்து என் மனம் துடியாய்த் துடிக்கிறது. பெண்களின் அன்பைவிட உங்கள் அன்பு மிக அருமையானது.+ 27  மாவீரர்கள் வீழ்ந்தார்களே!அவர்களுடைய போராயுதங்கள் அழிந்துபோனதே!”

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொன்றுபோட்டு.”
வே.வா., “மகுடத்தையும்.”
நே.மொ., “உன் இரத்தப்பழி உன் தலைமேல் இருக்கும்.”
வே.வா., “இனிமையானவர்கள்.”