தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதம் 2:1-17

  • அக்கிரமக்காரன் (1-12)

  • உறுதியோடு நிற்கும்படி அறிவுரை (13-17)

2  இருந்தாலும் சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்+ பற்றியும், நாம் அவரோடு கூட்டிச்சேர்க்கப்படுவதைப்+ பற்றியும் நாங்கள் உங்களிடம் இதைக் கேட்டுக்கொள்கிறோம்:  யெகோவாவின்* நாள்+ வந்துவிட்டது என்று யாராவது அருள்வாக்கு சொன்னாலோ,+ செய்தி சொன்னாலோ, எங்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் இருப்பதாகச் சொன்னாலோ, உடனே நிதானம் இழந்து பரபரப்பாகிவிடாதீர்கள்.  யாரும் எந்த விதத்திலும் உங்களை மோசம்போக்குவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், விசுவாசதுரோகம்+ முதலில் ஏற்பட்டு, அழிவின் மகனாகிய+ அக்கிரமக்காரன்+ வெளிப்பட்டால் தவிர அந்த நாள் வராது.  அவன் ஓர் எதிரி; கடவுள் என்று அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிற எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன்னை உயர்த்திக்கொள்வான், கடவுளுடைய ஆலயத்தில் உட்கார்ந்து எல்லார் முன்னாலும் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக்கொள்வான்.  நான் உங்களோடு இருந்த சமயத்தில் இதைப் பற்றியெல்லாம் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?  குறித்த காலத்துக்கு முன்பு அவன் வெளிப்படாதபடி, அவனுக்குத் தடையாகச் செயல்படுவது எதுவென்று இப்போது உங்களுக்கே தெரியும்.  மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம் ஏற்கெனவே செயல்பட்டு வருவது உண்மைதான்.+ ஆனால், இப்போது தடையாகச் செயல்படுகிறவன் நீக்கப்படும்வரைதான் அது மர்மமாக இருக்கும்.  அதன் பின்பு, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; நம் எஜமானாகிய இயேசு தான் பிரசன்னமாகி இருப்பதைத் தெரியப்படுத்தும்போது தன்னுடைய வாயிலிருந்து புறப்படும் வல்லமையால் அவனை அழித்து,+ ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்.+  ஆனால், அந்த அக்கிரமக்காரன் செயல்பட்டு வருவதற்குச் சாத்தானின் செல்வாக்குதான்+ காரணமாக இருக்கும். அந்தச் சமயத்தில், எல்லா வகையான வல்லமையுள்ள செயல்களும், பொய்யான அடையாளங்களும் அற்புதங்களும்,+ 10  எல்லா விதமான அநீதியும் ஏமாற்று வேலைகளும் நடக்கும்.+ இவையெல்லாம் அழிவின் பாதையில் போகிறவர்களிடம் நடக்கும். ஏனென்றால், மீட்புப் பெறும்படி சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 11  அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார். 12  சத்தியத்தை நம்பாமல் அநீதியை விரும்புகிற அவர்கள் எல்லாருக்கும் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதற்காக அப்படிச் செய்வார். 13  இருந்தாலும், யெகோவாவின்* அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தன்னுடைய சக்தியால் உங்களைப் பரிசுத்தமாக்கி,+ மீட்பதற்காக ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார்.+ 14  இந்த மீட்பைப் பெறுவதற்காக, நாங்கள் அறிவிக்கிற நல்ல செய்தியின் மூலம் அவர் உங்களை அழைத்தார்; நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அழைத்தார்.+ 15  அதனால் சகோதரர்களே, வாய்மொழியாகவோ கடிதம் மூலமாகவோ உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு+ உறுதியோடு நில்லுங்கள்.+ 16  நம்மேல் அன்பு காட்டி+ அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற+ நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், 17  உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து, நீங்கள் நல்லதையே சொல்வதற்கும் செய்வதற்கும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.