2 நாளாகமம் 22:1-12

  • அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

  • அத்தாலியாள் ஆட்சியைப் பிடிக்கிறாள் (10-12)

22  பின்பு, எருசலேம் மக்கள் யோராமின் கடைசி மகனான அகசியாவை அடுத்த ராஜாவாக்கினார்கள். ஏனென்றால், அரேபியர்களுடன் வந்த கொள்ளைக்கூட்டத்தார் யூதாவின் முகாமைத் தாக்கி, அவருடைய மூத்த மகன்கள் எல்லாரையும் கொன்றுபோட்டிருந்தார்கள்.+ அதனால், யோராமின் கடைசி மகனான அகசியா யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.+  ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்,+ இவள் உம்ரியின்+ பேத்தி.  ஆகாபின் வீட்டாரைப் போலவே+ அகசியா நடந்துகொண்டார்; மோசமான வழியில் நடப்பதற்கு அவருடைய அம்மா அவருக்கு ஆலோசனை கொடுத்தாள்;  அவருடைய அப்பா இறந்த பின்பு ஆகாபின் வீட்டார் அவருக்கு ஆலோசகர்களாக ஆனார்கள். அதனால், அவர்களைப் போலவே யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களை அகசியா செய்துவந்தார். அவருடைய அழிவுக்கு இதுதான் காரணம்.  அவர்களுடைய பேச்சைக் கேட்டு, இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராமுடன் சேர்ந்து இவரும் போருக்குப் போனார். சீரியாவின் ராஜாவான அசகேலை+ எதிர்த்துப் போர் செய்ய ராமோத்-கீலேயாத்துக்கு+ யோராமுடன் போனார். அந்தப் போரில் வில்வீரர்கள் அம்பு எறிந்து யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள்.  சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில் போர் செய்தபோது யோராம் காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+ ஆகாபின் மகனான யோராம்+ காயமடைந்ததால்*+ அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின்+ மகனுமான அகசியா* யெஸ்ரயேலுக்குப் போனார்.  யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+  ஆகாபின் வீட்டாரை யெகூ ஒழித்துக்கட்ட ஆரம்பித்தபோது, யூதாவிலிருந்த அதிகாரிகளையும் அகசியாவின் சகோதரர்களின் மகன்களையும் பார்த்து அவர்களைக் கொன்றுபோட்டார்.+ இவர்கள் அகசியாவின் அமைச்சர்களாக இருந்தார்கள்.  பின்பு, அவர் அகசியாவைத் தேடினார். சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அகசியாவைப் பிடித்து யெகூவிடம் கொண்டுவந்தார்கள். பின்பு, அவரைக் கொன்றுபோட்டார்கள். “என்ன இருந்தாலும், இவர் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கிய யோசபாத்தின் பேரன், இல்லையா?”+ என்று சொல்லி அவரை அடக்கம் செய்தார்கள்.+ அகசியாவுக்கு அடுத்தபடியாகத் தேசத்தை ஆட்சி செய்யும் அளவுக்கு அவருடைய குடும்பத்தில் வேறு யாருமே இருக்கவில்லை. 10  அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், யூதாவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+ 11  ஆனால், யோராம் ராஜாவின்+ மகளான யோசேபியாத் அகசியாவின் மகன் யோவாசைக்+ காப்பாற்றினாள்; (அவள் குருவாகிய யோய்தாவின்+ மனைவி, அகசியாவின் சகோதரி.) மற்ற இளவரசர்கள் கொல்லப்படவிருந்த சமயத்தில், யாருக்கும் தெரியாமல் யோவாசை மட்டும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போனாள்; பின்பு, அவனையும் அவனுடைய தாதியையும்* உட்புற படுக்கையறையில் ஒளித்து வைத்தாள். அவனை எப்படியோ அத்தாலியாளின் கண்ணில் படாமல் மறைத்து வைத்தார்கள்; அதனால், யோவாசின் உயிர் தப்பியது.+ 12  உண்மைக் கடவுளின் ஆலயத்தில் அவனை ஒளித்து வைத்திருந்தார்கள். அவன் ஆறு வருஷங்களுக்கு அவர்களோடு இருந்தான். அந்தச் சமயத்தில் அத்தாலியாள் அந்தத் தேசத்தை ஆட்சி செய்துவந்தாள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வியாதிப்பட்டதால்.”
எபிரெய கையெழுத்து பிரதிகள் சிலவற்றில் “அசரியா” என்று இருக்கிறது.
தாதி என்பவர் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்.