Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 87-91

உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்

உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்

யெகோவாவின் ‘மறைவில்’ இருப்பது அவரோடுள்ள பந்தத்தை பாதுகாக்கும்

91:1, 2, 9-14

  • இன்று, யெகோவாவின் மறைவில் இருப்பதற்கு நம்மை அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்

  • கடவுள்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்த மறைவிடத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாது

  • நாம் யெகோவாவின் மறைவில் இருந்தால், அவர்மேல் நாம் வைத்திருக்கிற அன்பையும் நம்பிக்கையையும் யாராலும் எதுவாலும் கெடுத்துப்போட முடியாது

‘வேடன்’ கண்ணி வைத்து பிடிக்கப் பார்க்கிறான்

91:3

  • பறவைகள் ரொம்ப கவனமாக இருக்கும்; அதனால் அவற்றைப் பிடிப்பது கஷ்டம்

  • ஒவ்வொரு வேடனும் பறவைகளை பற்றி நன்றாக தெரிந்துகொண்ட பிறகு சரியான கண்ணியை வைத்து அதை பிடிக்க முயற்சி செய்வான்

  • அதேமாதிரி சாத்தானும் யெகோவாவின் மக்களை பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, யெகோவாவோடு அவர்களுக்கு இருக்கும் பந்தத்தை கெடுக்க பல கண்ணிகளை பயன்படுத்துகிறான்

சாத்தான் பயன்படுத்தும் ஆபத்தான நான்கு கண்ணிகள்:

  • மனித பயம்

  • பொருளாசை

  • மோசமான பொழுதுபோக்கு

  • மனஸ்தாபங்கள்