Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

எல்லா சமயங்களிலும் நாம் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டுகிறோம். (மத் 22:37-39) மாநாட்டுக்கு வரும்போது அதை இன்னும் அதிகமாக காட்ட வேண்டும். அதை எப்படிக் காட்டுவது? 1 கொரிந்தியர் 13:4-8-ல், “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. . . . கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது. . . . அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று சொல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, என்னென்ன விதங்களில் மற்றவர்கள்மீது நீங்கள் அன்பு காட்ட முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்

  • உட்கார இடம் பிடிக்கும்போது எப்படி அன்பாக நடந்துகொள்ளலாம்?

  • இசை ஆரம்பித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

  • ஹோட்டலில் தங்கினால், அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

  • மாநாட்டு வேலைகளில் நாம் எப்படி உதவி செய்யலாம்?