கடவுள்தான் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ இருப்பார்
யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு அருமையான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் உற்சாகமாகப் பேசும்போது, கடவுளுடைய வாக்குறுதிகள் நம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சி முடிவுக்கு வரும் சமயத்தில், யெகோவா ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ இருப்பார். அதைக் கற்பனை செய்து பார்க்கும்படி அப்போஸ்தலன் பவுல் தன் சக கிறிஸ்தவர்களிடம் சொன்னார்.
எந்த எதிர்கால ஆசீர்வாதத்துக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள், ஏன்?
கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்று ஏன் நம்புகிறீர்கள்?