Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எனக்கு எது ரொம்ப முக்கியம்?

எனக்கு எது ரொம்ப முக்கியம்?

ரொம்ப முக்கியமான விஷயத்துக்காக ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடினார். அது என்ன? யெகோவாவிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதம். (ஆதி 32:24-31; ஓசி 12:3, 4) யாக்கோபு மாதிரியே யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்காகவும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் கடினமாக முயற்சி செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? உதாரணத்துக்கு, கூட்டத்துக்கு போவதா அல்லது இன்னும் கொஞ்ச நேரம் வேலை பார்ப்பதா என்ற சூழ்நிலையில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நம்முடைய நேரம், சக்தி, வளங்கள் இவை எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது, “போதும் போதும் என்கிற அளவுக்கு” ஆசீர்வாதங்களை அவர் நம்மேல் பொழிவார். (மல் 3:10, அடிக்குறிப்பு.) அவர் நம்மை வழிநடத்துவார், பாதுகாப்பார், நம்முடைய தேவைகளைப் பார்த்துக்கொள்வார்.—மத் 6:33; எபி 13:5.

ஆன்மீக குறிக்கோள்களை வைத்து அதில் நிலைத்திருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அந்தச் சகோதரிக்குப் பிடித்த விஷயமே எப்படி அவருக்குச் சோதனையாக மாறியது?

  • நம்முடைய வேலை நமக்கு எப்படி ஒரு சோதனையாக ஆகிவிடலாம்?

  • முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆன பிறகுகூட, தீமோத்தேயு ஏன் குறிக்கோள்களை வைக்க வேண்டியிருந்தது?—1தீ 4:16

  • வாழ்க்கையில் உங்களுக்கு எது ரொம்ப முக்கியம்?

    நம்முடைய “முக்கியமான வேலை” எது என்று எப்படிக் காட்டலாம்?