கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”
நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவாவுக்கு மட்டுமே முழு தகுதியும் இருக்கிறதென்று யாக்கோபு தெரிந்துவைத்திருந்தார். அதுவும் சிலை வணக்கம் பற்றி யெகோவா எந்தச் சட்டமும் கொடுக்காதபோதே அதைப் புரிந்துவைத்திருந்தார். (யாத் 20:3-5) யெகோவா தன்னை பெத்தேலுக்குத் திரும்பிப்போக சொன்னபோது, யாக்கோபு தன்னோடிருந்த எல்லாரிடமும் அவர்களுடைய சிலைகளைத் தூக்கிப்போடும்படி சொன்னார். சிலர் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் (இவை தாயத்துகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்) அந்தச் சிலைகளோடு சேர்த்து யாக்கோபு தூக்கிப் போட்டார். (ஆதி 35:1-4) யாக்கோபு செய்ததைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்!
இன்று, நாம் எப்படி யெகோவாவுக்கு மட்டுமே நம் வணக்கத்தைக் கொடுக்கலாம்? ஒரு முக்கியமான வழி, சிலை வழிபாட்டோடும் ஆவியுலகத் தொடர்போடும் சம்பந்தப்பட்ட எதையும் செய்யாமல் இருப்பதுதான். அதற்கு, மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பொருளையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதோடு, நாம் எப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம் என்று கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ரத்தக் காட்டேரிகள், பிணம் நடந்துவருவது மாதிரியான விஷயங்கள், அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றைப் பற்றிய புத்தகங்களையோ திரைப்படங்களையோ நான் ரசிக்கிறேனா? நான் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு மாயாஜாலத்தை, வசியம் செய்வதை, செய்வினை வைப்பதையெல்லாம் நகைச்சுவையான ஒன்றாகக் காட்டுகிறதா?’ யெகோவா வெறுக்கிற விஷயங்களின் பக்கமே நாம் போகக் கூடாது.—சங் 97:10.
“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பலேசா என்ற பைபிள் மாணாக்கருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தது?
-
உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ, உங்கள் பைபிள் படிப்புகளுக்கோ ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் மூப்பர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்வது ஏன் நல்லது?
-
யெகோவாவுடைய பாதுகாப்பு நமக்கு வேண்டுமென்றால் நாம் எந்த விஷயங்களையெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும்?
-
பலேசா என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தார்?
-
நீங்கள் வாழும் இடத்தில், பேய்களுடைய கட்டுப்பாட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்?