Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வம் காட்டுகிறவர்களைக் கூட்டங்களுக்கு வர உற்சாகப்படுத்துங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வம் காட்டுகிறவர்களைக் கூட்டங்களுக்கு வர உற்சாகப்படுத்துங்கள்

ஏன் முக்கியம்: யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்கும் துதிப்பதற்கும் கூட்டங்கள் உதவி செய்கின்றன. (சங் 149:1) கடவுளுக்குப் பிடித்ததைச் செய்ய கூட்டங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. (சங் 143:10) ஆர்வம் காட்டுகிறவர்களும் பைபிள் படிப்பவர்களும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தவுடனே பொதுவாக நல்ல முன்னேற்றம் செய்கிறார்கள்.

எப்படி செய்வது?

  • ரொம்ப நாள் காத்திருக்காமல் சீக்கிரத்திலேயே அவர்களை கூட்டங்களுக்கு அழையுங்கள். பைபிள் படிப்பை அவர்கள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.—வெளி 22:17

  • கூட்டங்களில் என்ன நடக்கும்... அடுத்த வாரம் கூட்டங்களில் என்னென்ன விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்... என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இதற்கு, கூட்டங்களுக்கான அழைப்பிதழ், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோ, இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்? என்ற சிற்றேட்டில் பாடம் 5, 7 உதவியாக இருக்கும்

  • கூட்டத்துக்கு வர அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்களே அவர்களை அழைத்து வாருங்கள்; எப்படிப்பட்ட உடையில் வருவது என்று சொல்லிக்கொடுங்கள். கூட்டம் நடக்கும்போது அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய புத்தகங்களைக் காட்டுங்கள். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி வையுங்கள்