Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

கேள்வி: [உள்ளூரில் நடந்த சோகமான சம்பவத்தை சொன்ன பிறகு இப்படி சொல்லுங்கள்] கஷ்டங்களுக்கு முடிவு வருமா? நீங்க என்ன நினைக்கிறீங்க, வரும்? வராது? வரலாம்?

வசனம்: சங் 37:9-11

பிரசுரம்: கஷ்டங்களுக்கு முடிவு வருங்கிறதுக்கான காரணத்த இந்த துண்டுப்பிரதி விளக்குது.

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)

கேள்வி: எங்க பார்த்தாலும் பயங்கரமான சம்பவங்கள் நடக்குது. அப்பாவி ஜனங்கதான் கஷ்டப்படுறாங்க. இதையெல்லாம் கடவுள் ஏன் விட்டுவெச்சிருக்காருனு நினைக்கிறீங்க?

வசனம்: 2பே 3:9

பிரசுரம்: கஷ்டங்களுக்கு முடிவு வருங்கிறதுக்கான ரெண்டு காரணத்த இந்த துண்டுப்பிரதி விளக்குது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

கேள்வி: கடவுளுக்கு நம்ம மேல அக்கறை இருக்குனு எப்படி தெரிஞ்சுக்கலாம்?

வசனம்: 1பே 5:7

உண்மை: நம்ம மேல கடவுளுக்கு அக்கறை இருக்கிறதுனாலதான் அவர்கிட்ட வேண்டிக்க சொல்லி சொல்றாரு.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.