Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 3-9

சங்கீதம் 144–146

பிப்ரவரி 3-9

பாட்டு 145; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!”

(10 நிமி.)

தன்னை நம்பியிருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (சங் 144:11-15; w18.04 பக். 32 பாரா. 2-3)

நமக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம் (சங் 146:5; w22.10 பக். 28 பாரா. 16-17)

யெகோவாவை கடவுளாக வணங்குகிறவர்கள் என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள் (சங் 146:10; w18.01 பக். 26 பாரா. 19-20)

நமக்குப் பிரச்சினைகள் வந்தாலும், யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யும்போது நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 145:15, 16—இந்த வசனங்கள், மிருகங்களை நாம் நடத்தும் விதத்தை எப்படிப் பாதிக்க வேண்டும்? (it-1-E பக். 111 பாரா 9)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். ஒருவர் காலேஜில் படிப்பதாக சொல்கிறார். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவை அறிமுகப்படுத்தி கலந்துபேசுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)

6. பேச்சு

(4 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 7—பொருள்: “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” (th படிப்பு 1)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 59

7. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவா சந்தோஷமுள்ள கடவுள். (1தீ 1:11) அவர் நமக்கு நிறைய அருமையான பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசுகள் அவருடைய அன்பையும், நாம் சந்தோஷமாக இருக்க அவர் ஆசைப்படுவதையும் காட்டுகின்றன. (பிர 3:12, 13) அந்தப் பரிசுகளில் இரண்டைப் பற்றி இப்போது பார்க்கலாம்: உணவு மற்றும் ஓசை.

நாம் சந்தோஷமாக இருக்க யெகோவா விரும்புகிறார் என்பதற்கு அத்தாட்சிகள்—இனிய ஓசைகளும் சுவையான உணவும் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • யெகோவா கொடுத்திருக்கும் பரிசுகளான உணவும் ஓசையும், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுவதை எப்படிக் காட்டுகின்றன?

சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுவதைத் தெரிந்துகொள்வது, பைபிளின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் அவர் தரும் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க உங்களை எப்படித் தூண்டுகிறது?

8. சபைத் தேவைகள்

(5 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 85; ஜெபம்