“கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்”
அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைப் போர் செய்துகொண்டிருக்கும் வீரர்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார். ‘பொல்லாத தூதர் கூட்டம்தான்’ நம் எதிரிகள். ஒருவேளை, எளிதில் தோற்றுப்போகும் பலவீனமான ஆட்களைப் போல் நாம் தெரியலாம். ஆனால், யெகோவாவின் உதவியோடு நம்மால் இந்தப் போரில் ஜெயிக்க முடியும். அதற்கு, ‘அவர் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ள’ வேண்டும்.
கவசத்தின் ஒவ்வொரு பாகத்தையும், அது எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிடுங்கள்
தியானித்துப் பார்க்க... நான் முழு கவசத்தையும் போட்டிருக்கிறேனா?