Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 23-29

சங்கீதம் 119:121-176

டிசம்பர் 23-29

பாட்டு 31; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. வலியப் போய் வலியை வாங்காதீர்கள்

(10 நிமி.)

கடவுளுடைய கட்டளைகளை நேசியுங்கள் (சங் 119:127; w18.06 பக். 17 பாரா. 5-6)

தப்பான விஷயங்களை வெறுத்து ஒதுக்குங்கள் (சங் 119:128; w93-E 4/15 பக். 17 பாரா 12)

யெகோவா சொல்வதைக் கேளுங்கள்; “அனுபவமில்லாதவன்” தவறு செய்துவிடுவதுபோல் நீங்களும் செய்துவிடாதீர்கள் (சங் 119:130, 133; நீதி 22:3)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய கட்டளைகளை நேசிக்கிற விஷயத்திலும் கெட்டதை வெறுக்கிற விஷயத்திலும் நான் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 119:160—இந்த வசனம் சொல்வதுபோல், நாம் எதில் உறுதியாக இருக்க வேண்டும்? (w23.01 பக். 2 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. அந்த நபருக்கு ஆர்வம் இருக்கும் விஷயத்தை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) கூட்டங்களுக்குத் தொடர்ந்து வராத பைபிள் மாணவரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 121

7. பணமே பாரமாகிவிட வேண்டாம்!

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பணத்தின்மீது மோகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் “பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1தீ 6:9, 10) நாம் பண ஆசையை வளர்த்துக்கொண்டால்... அதன் பின்னாலேயே ஓடினால்... மோசமான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவற்றில் சில:

  • யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியாது.—மத் 6:24

  • வாழ்க்கையில் திருப்தியே இருக்காது.—பிர 5:10

  • தவறுகள் செய்துவிட வாய்ப்பு அதிகம். உதாரணத்துக்கு, பொய் பேசுவது, திருடுவது, ஏமாற்றுவது என எதையாவது செய்துவிடுவோம். (நீதி 28:20) பிறகு, குற்ற உணர்ச்சியால் கஷ்டப்படுவோம், யெகோவாவிடமும் மற்றவர்களிடமும் நம் பெயரைக் கெடுத்துக்கொள்வோம்

எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள், பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • பண விஷயத்தில் என்ன மனநிலை நமக்கிருந்தால் வேதனையைத் தவிர்க்கலாம்? ஏன்?

ஒருவேளை நமக்கு பண ஆசையில்லாமல் இருக்கலாம். ஆனால், அதை ஞானமாகப் பயன்படுத்தவில்லை என்றால் வேதனைதான் மிஞ்சும்.

காசு கரையாமல் இருக்க டிப்ஸ் என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • நாம் ஏன் வரவுசெலவைத் திட்டம் போட வேண்டும்? அதை எப்படிப் போடுவது?

  • சேமித்து வைப்பது ஏன் நல்லது?

  • அநாவசியமாகக் கடன் வாங்காமல் இருப்பது ஏன் புத்திசாலித்தனம்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 101; ஜெபம்