கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”
திறமைசாலியான மனைவியால் கணவனுக்கு நல்ல பெயர் கிடைக்கும். லேமுவேல் ராஜாவின் காலத்தில், திறமைசாலியான மனைவியின் கணவன் “நகரவாசல்களில் பிரபலமான” நபராக இருந்தார். (நீதி 31:23, NW) இன்றும்கூட முன்மாதிரியாக இருக்கிற சகோதரர்கள் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். கல்யாணம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இன்னொரு தகுதியும் இருக்க வேண்டும். அதாவது, அவர்களுடைய மனைவிகள் நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் கணவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். (1தீ 3:4, 11) இப்படி திறமைசாலிகளாக இருக்கும் மனைவிகள் தங்களுடைய கணவர்களின் பாராட்டை மட்டும் அல்ல முழு சபையின் பாராட்டையும் பெறுகிறார்கள்.
திறமைசாலியான மனைவி பொறுப்பிலுள்ள கணவருக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறாள்?
-
அன்பாக பேசி அவரை உற்சாகப்படுத்துகிறாள்.—நீதி 31:26
-
சபைக்காக அவர் நேரம் செலவு செய்வதை பற்றி குறைச் சொல்லாமல் இருக்கிறாள்.—1தெ 2:7, 8
-
இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறாள்.—1தீ 6:8
-
சபை சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களைப் பற்றியும் கணவனிடம் கேட்க மாட்டாள். —1தீ 2:11, 12; 1பே 4:15