Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 யோவான் 1-13; 3 யோவான் 1-14யூதா 1-25

சத்தியத்தில் நிலைத்திருக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்

சத்தியத்தில் நிலைத்திருக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்

யூதா 3

“இடுக்கமான கதவு வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூ 13:24) அதன் அர்த்தம் என்ன? கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க நாம் கடினமாகப் போராட வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். இயேசுவின் தாயான மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்த யூதாவும்கூட, ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’ என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதினார். இதையெல்லாம் செய்ய நாம் ஊக்கமாக முயற்சி எடுக்க வேண்டும்:

  • பாலியல் முறைகேட்டைத் தவிர்க்க வேண்டும்.​—யூ 6, 7

  • அதிகாரத்தில் இருப்பவர்களை மதிக்க வேண்டும்.​—யூ 8, 9

  • ‘மகா பரிசுத்த விசுவாசத்தில்,’ அதாவது கிறிஸ்தவ போதனைகளில், நம் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும்.​—யூ 20, 21