சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
கி.பி. 32 பஸ்காவுக்குக் கொஞ்சம் முன்பு, இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தார். நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுமே பதிவு செய்த ஒரே அற்புதம் இதுதான்.
இயேசு அப்போது பயன்படுத்திய அதே முறையைத்தான் இன்றுவரை பயன்படுத்திவருகிறார்.
-
சீஷர்களிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் மட்டும்தான் இருந்தன; ஆனாலும், ஒரு பெரிய கூட்டத்துக்கு உணவளிக்கும்படி இயேசு அவர்களிடம் சொன்னார்
-
இயேசு அந்த ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, ஜெபம் செய்துவிட்டு, அவற்றைப் பிட்டு, சீஷர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை அந்தக் கூட்டத்தாருக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள்
-
அங்கிருந்த எல்லாருமே திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு நிறைய உணவு இருந்தது. இது ஒரு பெரிய அற்புதம்! சிலரை மட்டும், அதாவது தன் சீஷர்களை மட்டும், பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு இயேசு உணவளித்தார்
-
கடைசி நாட்களில், “ஏற்ற வேளையில்” ஆன்மீக உணவு கொடுக்க ஒரு தொகுதியினரை நியமிக்கப்போவதாக இயேசு முன்கூட்டியே சொன்னார்.—மத் 24:45
-
1919-ல், தன்னுடைய “வீட்டாருக்கு” உணவளிப்பதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ அவர் நியமித்தார். இவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களின் ஒரு சிறிய தொகுதியினர்
-
பரலோக நம்பிக்கையுள்ள இந்தச் சிறிய தொகுதியினரின் மூலம், முதல் நூற்றாண்டில் பயன்படுத்திய அதே முறையில் இன்று இயேசு உணவளித்துவருகிறார்
ஆன்மீக உணவளிப்பதற்காக இயேசு யாரைப் பயன்படுத்துகிறார் என்று புரிந்து வைத்திருப்பதையும், இந்த ஏற்பாட்டை மதிப்பதையும் நான் எப்படிக் காட்டலாம்?