Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 4-6

“கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”

“கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”

5:8, 18, 21

யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க... அவருக்குத்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்க... அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்பதை நிரூபிக்க... மீட்புவிலை ரொம்பவே முக்கியம். அதோடு, இப்போதே நாம் யெகோவாவுடைய நண்பர்களாக ஆவதற்கும், கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் என்றென்றும் வாழ்வதற்கும் அது உதவுகிறது.

மீட்புவிலை என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

  • கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் மீட்புவிலையின் மீது நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதையும், நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும் காட்டுகிறோம்

  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவைப் போலவே நாமும் எல்லா விதமான மக்கள்மீதும் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—மத் 22:39; யோவா 3:16

யெகோவா கொடுத்திருக்கும் மீட்புவிலை என்ற பரிசுக்கு நான் வேறெந்த வழிகளில் நன்றி காட்டலாம்?